![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
விழுப்புரம்: பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
![பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! PMK Life imprisonment for the accused in the case of celebrity murder Villupuram court action verdict பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/04/33f5cf7e28ae24014cb47b6c5212b5a21656954928_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம், முத்தோப்பு கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரவி (வயது 55). பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர துணை செயலாளர். இவருடைய அண்ணனான கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டை சேர்ந்த கமலக்கண்ணன் மகன் தொழிலாளி ஜெய்கணேஷ் (36) என்பவர் ரவியின் உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதனால் ரவிக்கும், ஜெய்கணேசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 30.1.2021 அன்று பகல் 12.05 மணியளவில் ரவி தனது வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகைக்கு மாடுகளை ஓட்டியபடி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஜெய்கணேஷ், முன்விரோதம் காரணமாக தனது சித்தப்பா என்றும் பாராமல் ரவியை தகாத வார்த்தையால் திட்டியதோடு தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கத்தியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ரவி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ரவி இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்கணேசை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட ஜெய்கணேசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்கணேஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது தற்போது பரபரப்பாகியுள்ளது.
ஆப் மூலம் கடன்; ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் - கண்ணீருடன் அரசுக்கு பெண் கோரிக்கை
மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?
Anbil Mahesh Speech : அறிவாலயத்தில் இருப்பது போல் உணர்கிறேன் - அன்பில் மகேஷின் அசத்தல் பேச்சு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)