மேலும் அறிய

Crime: காதலனுடன் இணைந்து 3 வயது குழந்தையை திட்டமிட்டு கொலை செய்த தாய்... உடற்கூராய்வில் வெளிப்பட்ட மர்மம்..

ரவி தன் வீட்டுக்கு பரத்தை தூக்கிவந்து அங்கு அவரை சித்திரவதை செய்துள்ளார். மேலும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தும் கடுமையாகத் தாக்கியும் கொலை செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் திருமணம் மீறிய உறவில் இருந்த பெண் தன் காதலனுடன் இணைந்து திட்டமிட்டு தன் மூன்று வயது குழந்தையை கொலை செய்த செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் உடற்கூராய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

பரத் குமார் எனும் குழந்தை கடந்த ஜூலை 8ஆம் தேதி மூஷிர்பாத் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ராம் நாகர் மோகன் நகரில் உள்ள முத்தலா ரவி என்பவரது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து குழந்தையின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது, அதன்படி, அவர் தலையில் பலமுறை பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தது முன்னதாகத் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து ரவி கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குழந்தையின் தாய் போகண்டி நாக லட்சுமியுடன் அவர் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், முன்னதாக இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்போதெல்லாம் குழந்தை தொடர்ந்து இடையூறாக இருந்து வந்ததால் கோபமடைந்து குழந்தையைக் கொலை செய்யத் திட்டமிட்டதை ரவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

அதன்படி குழந்தையின் தாய், குழந்தையை அங்கன்வாடியில் இறக்கிவிட்டு தன் கணவருடன் ஹை டெக் சிட்டிக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேர விரயம் செய்து குழந்தையை அங்கன்மையத்தில் இருந்து குடும்ப நண்பர் ரவியை அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளார்.

தொடர்ந்து ரவி தன் வீட்டுக்கு பரத்தை தூக்கிவந்து அங்கு அவரை சித்திரவதை செய்துள்ளார். மேலும் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தும் கடுமையாகத் தாக்கியும் கொலை செய்துள்ளார்.

இந்த உண்மையை நாகலட்சுமி காவல் துறையினரிடம் தெரிவிக்காமல் மறைத்த நிலையில், முன்னதாக குழந்தை பரத் நாற்காலியில் இருந்து கீழே விழுந்து தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்ததாக ரவி தெரிவித்தார். 

இதனையடுத்து சந்தேகத்துக்குரிய மரணமாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர். மேலும் குழந்தையின் மரணத்தைக் காரணமாக வைத்து தன் கணவனை மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பவும், சொத்துகளை விற்றுவிட்டு காதலனுடன் தப்பிச் செல்லவும் நாகலட்சுமி திட்டமிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Serendipity Legal (@serendipitylegal)

இந்நிலையில் குழந்தையின் உடற்கூராய்வு முடிவுகளைத் தொடர்ந்து இந்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. இந்நிலையில், கொலையாளி ரவி, அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோர் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget