மேலும் அறிய

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராளியான ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திடீர் தற்கொலை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த ஏகனாபுரம் கிராம துணை தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 13 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி, 5700 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தொடரும் போராட்டம்

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைப்பதால் பரந்தூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாம்புரம், மேலேறி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளும் அகற்றப்பட உள்ளதால் அக்கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ஏகனாம்புரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் போராட்டம் 848 வது நாளை எட்டி உள்ளது.

அவ்வப்போது வாக்குவாதம்

தற்போது நிலம் அளவிடும் பணியினை பொதுப்பணி துறை துவங்கியதை தொடர்ந்து, நெல்வாய் ஊராட்சியில் வீடுகளை அளவிடும் பணிக்கு வருவாய் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வந்தபோது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஒருபுறம் அரசு தனது விமான நிலைய பணிகளை தொடர்ந்தாலும், பொதுமக்கள் போராடிக் கொண்டே இருக்கிறார்கள் ‌‌. 

இந்த போராட்டத்தில் பங்கேற்று வந்தவர் கணபதி. இவரது மனைவி திவ்யா (35). இவர் ஏகாம்பரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி அளித்தவர். திவ்யாவும் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்ற உதவியாக இருந்தவர். இந்நிலையில் திங்கள்கிழமை திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் ஏற்கெனவே உடல் நலம் குன்றி இருந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. குடும்ப பிரச்சனை காரணமாகவே இந்த தற்கொலை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறை அறிக்கை என்ன ?

திவ்யா(35) க/பெ.கணபதி, கீரநல்லூர் கிராமம் என்பவர் இறந்தது சம்மந்தமாக, வாதி கௌசல்யா(3) க.பெ.சேகர், பிள்ளையார் கோயில் தெரு. கீரநல்லூர் கிராமம் என்பவரின் சகோதரியான திவ்யா என்பவருக்கு கடந்த 15 வருடஙகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மூன்று பிள்ளைகள் உள்ளதாகவும் திவ்யா ஏகனாபுரம் கிராமத்தின் துணை பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்ததாகவும், இவரது கணவர் கணபதி விவசாய வேலை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், இந்நிலையில் 18.11.2024 அன்று காலை 08.30 மணியளவில் திவ்யாவின் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றதாகவும் பின்னர் 10.00 மணியளவில் அவரது கணவர் வேலை சம்மந்தமாக காஞ்சிபுரம் சென்றதாகவும் திவ்யா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். பின்னர் 15.45 மணியளவில் கணபதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யா வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இருந்ததாக புகார். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget