மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Padappai Guna | படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார்
பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி இன்று அதிகாலை தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டார்.
![Padappai Guna | படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார் padappai guna arrest issue wife ellammal arrest by special team police adsp velladurai Padappai Guna | படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/586e606dfcd42e453b7b391521a952b4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
படப்பை குணா மனைவி எல்லம்மாள்
தொழில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் அட்டகாசம் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதிகளில் நாளுக்கு நாள் ரவுடிகளின் அட்டகாசம் பெருகி வருகிறது. கடந்த சில மாதங்களாக ரவுடிகள் மாதம்தோறும் தங்களுக்கு ,இவ்வளவு கட்டிக்கொடுக்க வேண்டும் என தங்கள் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டி பல தொழில் நிறுவனங்களை வேலைசெய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
![Padappai Guna | படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/1582350787467f051bb45ef876df4260_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடி மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் படப்பை குணா என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். படப்பை குணாவின் ஆதரவாளர்களை ஒடுக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர்.
![Padappai Guna | படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/426f20f9cab8128eaf6c41cb384aa109_original.jpg)
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனை அடுத்து அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே வழக்கில் போந்தூர் சேட்டு என்பவரையும் தற்போது தேடி வருகின்றனர்.
மனைவி எல்லம்மாள்
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டு குணாவின் மனைவி எல்லம்மாள் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றுவதற்காக அவர் முயற்சி எடுத்து அதில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
![Padappai Guna | படப்பை குணாவின் மனைவி எல்லம்மாளை கைது செய்தனர் தனிப்படை போலீசார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/09/6c287372edc72bb1ca2d0f9bd7f4cad1_original.jpg)
இந்நிலையில் இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் மதுரமங்கலம் இல்லத்தில் எல்லம்மாள் இருந்தபொழுது தனிப்படை காவல்துறையினர் வழக்கு விசாரணைக்காக அவரை சுங்கா சத்திரம் காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்து சென்றனர். அவருடன் அவருடைய உறவினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் மீதும் சில வழக்குகள் உள்ளன . தற்போது சுங்காச்சத்திரம் காவல் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion