மேலும் அறிய

Crime: பணிக்கு சென்ற வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை - நெல்லையில் பயங்கரம்

கொலையான நம்பிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது மனைவி 5 மாத  கர்ப்பிணியாக உள்ளார்.

நெல்லை மாவட்டம் பேட்டையை அடுத்த நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்த குமாரவேல் என்பவருடைய மகன் நம்பி (30). இவர் பேட்டையில் உள்ள தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் 4 பேர் அவரை பின் தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தொழிற்பேட்டை வளாகத்திற்கு அருகே வந்த போது அந்த கும்பல் நம்பியை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கீழே விழுந்து நம்பி சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த நெல்லை மேற்கு பகுதி காவல் துணை கமிஷனர் சரவணகுமார் மற்றும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நம்பியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதோடு அருகில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலையான நம்பிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அவரது மனைவி 5 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின் தற்போது தான் நம்பி பேட்டையில் உள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நம்பி நேற்று மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக கடந்த கிருஷ்ண ஜெயந்தி விழா அன்று நம்பிக்கும் மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நம்பி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் நடுக்கல்லூர் மற்றும் பேட்டை பகுதிகளில் காவல்துறை குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்...

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
’’18 வருஷமா இருக்கேன்; எனக்கே தெரியல- ஏடிஜிபி ஜெயராமின் சஸ்பென்ஷனை உடனே ரத்து செய்ங்க’’- உச்ச நீதிமன்றம் காட்டம்!
Modi Spoke to Trump: “நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
“நீங்க மத்தியஸ்தம் பண்ணல; நான் அமெரிக்காவுக்கு வர முடியாது“ - ட்ரம்ப்பிடம் அதிரடி காட்டிய மோடி
Embed widget