மேலும் அறிய

வரதட்சனைக் கொடுமை: மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை! நீதிமன்றம் அதிரடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, வரதட்சணைக்காக மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது பெற்றோருக்கு மரண தண்டனை விதித்தார்.

மேலும், மூவருக்கும் மொத்தம் ₹1.80 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரவிக்குமார் திவாகர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மே 1, 2024 அன்று ஃபராவை அவரது கணவர் மக்‌ஷத் அலி, மாமனார் சபீர் அலி மற்றும் மாமியார் மசிதன் 'ஹம்ஷ்ரீன்' ஆகியோர் அவர்களது வீட்டில் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் “இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் போய்விடும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், வேறு ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கவும் இந்த மரண தண்டனை வழங்கப்படுகிறது" என்று கூறியது.

மேலும், “இதுபோன்ற வழக்குகளில் (வரதட்சணை மரணங்கள்) கருணை காட்டப்பட்டால், அது வரதட்சணை கொலைகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்” என நீதிமன்றம் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் மாநில அரசின் சார்பாக அரசு வழக்கறிஞர் திகம்பர் சிங் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, 2022ஆம் ஆண்டு மே மாதம் ஃபராஹ் என்ற பெண்ணுக்கும் மக்‌ஷத் அலி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, ஃபராஹ் கணவரும் மாமியாரும் வரதட்சணையாக பணமும் மோட்டார் சைக்கிளும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

ஃபராஹ்வின் குடும்ப உறுப்பினர்கள் இந்த விஷயத்தை மணமகனின் பெற்றோரிடம் எடுத்துச் சென்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தங்கள் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தான் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்றதாக தெரிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget