மேலும் அறிய

“வரதட்சணை கொடுமை; ஆனால் கைது நடவடிக்கை இல்லை” : ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த மனைவி!

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அரசு அதிகாரியாக இருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த புதன்கிழமை அன்று போபாலில் உள்ளி மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர்  மோஹித் பண்டாஸ் தற்போது வனத்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் கமிஷனர் சச்சின் அதுல்கர்  இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், மோஹித் பண்டாஸ், அவரது தாய் மற்றும் சகோதரி மீது செவ்வாய்க்கிழமை இரவு வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதலுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அதிகாரி மீது ஐபிசியின் பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவன் அல்லது கணவனின் உறவினர் பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.


“வரதட்சணை கொடுமை; ஆனால் கைது நடவடிக்கை இல்லை” : ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது புகார் அளித்த மனைவி!
தற்போது ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருக்கும் மோஹித் பண்டாஸும் அவரது மனைவியும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் இருப்பதாக கூறப்படுகிறது.  காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் மோஹித் பண்டாஸின் மனைவிக்கும் அவரது தாயருக்கும் சில  பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல மோஹித்தின் சகோதரருக்கும் மனைவிக்கும் இடையிலும் சில பிரச்சினைகள் இருந்திருக்கிறது. மேலும் தன்னை தனது கணவரும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய பெண் , இதுவரையில் காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை என தெரிவித்துள்ளார். வரதட்சணை தடுப்பு சட்டம் பிரிவு 498 ஏ -இன் கீழ்  குற்றம் சாட்டப்பட்ட கணவன் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் . குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அரசு அதிகாரியாக இருந்தால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த வரதட்சணை சட்டத்தை  பெண்கள் சிலர் பிடிக்காத குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேற பயன்படுத்துவதாக உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்திருந்ததும் நினைவுக்கூறத்தக்கது.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget