மேலும் அறிய

ஆப் மூலம் வந்த ஆப்பு... பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த சென்னை இளைஞருக்கு நேர்ந்த சோகம்

தனியார் செயலி மூலம் வீட்டிற்கு வந்த நபர்கள், இளைஞரை கட்டிப் போட்டு 30 சவரன் நகை கொள்ளை.

வெளியூர் சென்ற பெற்றோர்

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகர் மூன்றாவது லிங்க் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஹித்தேஷ் ( வயது 26 ). இவர் மேற்கண்ட முகவரியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

எம்.கே.பி நகர் பகுதியில் சொந்தமாக துணிக்கடை வைத்து இவரும், இவரது தந்தையும் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் ஹித்தேஷன் தந்தை மற்றும் தாய் இருவரும் உறவினர் திருமணத்திற்காக பெங்களூர் சென்றுள்ளனர்.

ஆட்டோவில் வந்த நபர்கள்

இந்த நேரத்தில் ஹித்தேஷ் கிரிண்டர் என்ற தனியார் செயலி மூலம் ஏற்கனவே பழக்கமான நபர் ஒருவரை உல்லாசத்திற்காக வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஹித்தேஷ் அழைத்த நபர் மற்றும் அவருடன் ஒரு ஆண், ஒரு பெண் என மூன்று பேர் ஆட்டோவில் ஹித்தேஷ் வீட்டிற்கு வந்துள்ளனர். வந்த நபர்கள்  ஹித்தேஷை பாத்ரூமில் அடைத்து வைத்து விட்டு வீட்டிலிருந்த சுமார் 30 சவரன் தங்க நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

நகை திருட்டு - மாறி மாறி சொன்ன தகவல்

அவர்கள் சென்றவுடன் ஹித்தேஷ் பாத்ரூமில் இருந்து வெளியே வந்து இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எம்.கே.பி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஹித்தேஷ் திருடு போன பொருட்கள் குறித்து மாறி மாறி கூறுவதால் உண்மையிலேயே 30 சவரன் நகை திருடு போய் உள்ளதா ? அல்லது குறைவான அளவில் நகைகள் திருடு போய் உள்ளதா ? என்பது குறித்தும் எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து , வந்த மூன்று பேர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் படுத்து உறங்கிய நபர் லாரி மோதி உயிரிழப்பு

சென்னை கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 30 ) இவருக்கு திருமணமாகி மனைவி பிரிந்து சென்று விட்ட நிலையில் ஆறு வயது மகன் சந்தோஷ் உடன் மேற்கண்ட முகவரியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் குப்பைமேடு பகுதியில் குப்பைகளை சேகரித்து  அதனை பழைய இரும்பு கடையில் போட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் . குடிபோதைக்கு அடிமையான விஜய்குமார் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது பெற்றோர்களிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

குடிபோதையில் வீட்டிற்கு வந்த விஜயகுமார் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு குப்பை மேட்டிற்க்கு சென்று படுத்து உறங்கி உள்ளார். குப்பைமேடு பகுதியில் குப்பை சேகரிக்க சென்ற நபர்கள் பார்க்கும் போது அடையாளம் தெரியாத குப்பை லாரி மோதி உடல் நசிங்கி உயிரிழந்த நிலையில் விஜயகுமார் இருந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கொடுங்கையூர்  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு நேரங்களில் குப்பை கொட்ட வரும் குப்பை லாரி விஜயகுமார் மீது ஏறி இறங்கி இருக்கலாம் இதில் குடிபோதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த விஜயகுமார் உயரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து எந்த லாரி விஜயகுமார் மீது ஏறி இறங்கியது என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget