மேலும் அறிய

"நீங்க நம்பலனாலும் இதுதாங்க நிஜம் "மதுபிரியர்களால் பூட்டப்பட்ட டாஸ்மாக் - ஏன் தெரியுமா...?

சீர்காழி அருகே மதுப்ரியர்களே டாஸ்மாக் மதுபான கடையை பூட்டிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுகடைகளிலும் மது பாட்டில் ஒன்றிக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் காலம் காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், மதுப்ரியர்களுக்கான தீர்வு தான் இன்றளவும் கிடைத்தபாடில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு டாஸ்மாக் மது கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவதை கண்டித்து டாஸ்மாக் கடையின் கதவை பூட்டி மதுப்ரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலை

தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனத்தால் மாநிலம் முழுவதும் 4,829 மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளை நவீனமயமாக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், பாட்டிலுக்கு ரூபாய் 10 கூடுதலாக வாங்குவதை தடுக்கவும் 'எண்ட் டூ எண்ட்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மது பாட்டில்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாவது முதல் கடைகளில் விற்பனையாவது வரை அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்க முடியும். அதேபோன்று ஊழியர்கள் எவ்வளவு மதுபானம் விற்றார்கள், எந்த வகை மது எந்த நேரத்தில் விற்பனையானது. எந்த மதுபாட்டில் குறைவாக வாங்கப்படுகிறது. எந்த ஊரில் எந்த மதுவிற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. மதுபாட்டில்கள் விற்பனை குறித்து கணக்கு வழக்கு போன்ற அனைத்தையும் அறிய முடியும். மேலும் துல்லியமாக எல்லா நிகழ்வுகளை அரசால் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் கடையில் உள்ள கூடுதல் பணத்தை எளிதாக கண்டுபிடிக்கவும் முடியும்.


6 இடங்களில் புதிய திட்டம் 

இந்த திட்டம் தற்போது காஞ்சீபுரம் (வடக்கு), காஞ்சீபுரம் (தெற்கு), அரக்கோணம், ராமநாதபுரம், கரூர், சிவகங்கை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் , மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளரிடம் செல்போன் வடிவிலான 'ஸ்கேனர்' கருவியும், சிறிய வடிவிலான 'பில்' போடும் கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கருவிகளும் 'புளூடூத்' மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது. என்ன தான் திட்டத்தை அரசு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினாலும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை தடுக்க முடியவில்லை என்பது குடிமகன்களின் குற்றச்சாட்டமாக இருந்து வருகிறது.


தொடரும் விலை பிரச்சினை 

இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட ஈசானிய தெருவில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுப்ரியர்கள் சார்பில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இதுபற்றி புகார் தெரிவித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், டாஸ்மாக் கடையில் கூடுதல் பணம் வசூலிப்பதும் நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.


டாஸ்மாக் கடையை பூட்டி போராட்டம் 

இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த மதுபிரியர்கள், பொறுமையிழந்து திடீரென பீர் பாட்டில் பொங்குவதை போன்று அவர்களும் பொங்கி எழுந்துள்ளனர். அங்கு மதுவாங்க திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடிமகன்கள் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவுவாயில் கதவை பூட்டி முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஈசானிய தெரு அரசு மதுபான டாஸ்மாக் கடையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் அலுவலர்கள், பணியாளர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிமகன்கள் முழக்கங்களை எழுப்பினர்.


காவல்துறையினர் சமரசம் 

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மது பிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அரசு நிர்ணயித்த விலைக்கு விற்க வேண்டும் என்ற கோரிக்கையை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக டாஸ்மாக் கடை அலுவலர், பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மதுபிரியர்கள் கூறுகையில் ஈசானிய தெரு அரசு மதுபான டாஸ்மாக் கடையில் 190 ரூபாய் என விலை அச்சிடப்பட்ட 180 மில்லி அளவுக் கொண்ட மதுபானம் பாட்டில் 220 ரூபாய் என ரசீது கொடுத்துவிட்டு, 240 ரூபாய் க்கு விலைக்கு விற்பனை செய்கின்றனர் என்றும், சம்பந்தப்பட் டாஸ்மாக ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
Gold Storage At Home: பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’
வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift 2026: ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
ரூ.3000 வாங்க ரெடியா.! நாளை முதல் பொங்கல் பரிசு- யாருக்கெல்லாம்.? அரசு முக்கிய அறிவிப்பு
Pongal special train: நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, திருப்பூருக்கு பொங்கல் சிறப்பு ரயில்.! முன்பதிவு எப்போது - தெற்கு ரயில்வே அறிவிப்பு
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
E Passport: வந்தாச்சு இ-பாஸ்போர்ட்! எப்படி பெறுவது? கட்டணம், விண்ணப்பிக்கும் முறை முழு விவரம்!
Gold Storage At Home: பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
பில், ஆதாரம் இல்லாமல் எவ்வளவு தங்கத்தை வீட்டில் வைத்திருக்க முடியும்.? அதன் விதிகள் தெரியுமா?
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
Honda Shine 100: குறைவான விலையில் 65 கி.மீ மைலேஜ்; ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா ஷைன் 100
குறைவான விலையில் 65 கி.மீ மைலேஜ்; ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் ஹோண்டா ஷைன் 100
Embed widget