மேலும் அறிய

“போவோம்.. மல்லாக்க படுத்து தூங்குவோம்” - டிஎஸ்பியிடம் வம்பிழுத்த ஆசாமி; வச்சி செய்த போலீஸ்!

போதையில் உளவுத்துறை டி.எஸ்.பியிடம் வம்பிழுத்த ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையில் உளவுத்துறை டி.எஸ்.பியிடம் வம்பிழுத்த ஆசாமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தலைநகரான சென்னையில் தொடர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இக்குற்றங்களுக்கு மது உள்ளிட்ட போதை பொருட்கள் அடிப்படையாக இருந்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

திரைப்படம் ஒன்றில் வடிவேல் போலீஸ் அதிகாரியிடம் வாண்டடாக வம்பிழுப்பார். அதற்கு போலீஸ் எவ்வளவோ அமைதியாக இருந்தும் வடிவேல் அடங்கமாட்டார். பின்னர் அவர் போலீஸ் என்று தெரிந்ததும் தர்ம அடி வாங்குவார். அதேபோன்று ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 

மது போதையில் உளவுத்துறை டி.எஸ்.பியிடம் ஆசாமி ஒருவர் வம்பிழுத்துள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. டி.எஸ்.பி அருளரசு ஜஸ்டின் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக மயிலாப்பூருக்கு சென்றிருந்தபோது, அங்கே வந்த ஆசாமி ஒருவர், டி.எஸ்.பியின் காரை ஓரமாக நிறுத்த சொல்லி மிரட்டியுள்ளார்.

கார் ஏற்கெனவே ஓரமாகத்தான் நின்றுகொண்டிருந்தது. ஆனால் அதனை இன்னும் ஓராமாக நிறுத்தச் சொல்லி ஆசாமி மிரட்டியுள்ளார். அப்போது கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய டி.எஸ்.பி, என்ன பிரச்னை என்று விசாரித்துள்ளார்.

உடனே போதை ஆசாமி, '“எங்க  ஏரியாவுல வந்து என்கிட்டயே பிரச்னை பண்றியா?” என்று சத்தமிட தொடங்கியுள்ளார். இதனையடுத்து அந்த ஆசாமி மது போதையில் இருந்தது தெரிய வரவே அங்கிருந்து டிஎஸ்பி  நகரத் தொடங்கினார்.

ஆனால் அவரை நகர விடாத ஆசாமி, எதிர்பாராத நேரத்தில் டிஎஸ்பி கண்ணத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் நிலைக்குலைந்து போன அவர் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் காவல்துறையினர் போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரித்ததில் போதை ஆசாமி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வரும் பிரின்ஸ் பேட்ரிக் என்பதும், தனியார் நிறுவனத்தில் பவுன்சராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

இவரின் சொந்த ஊர் மதுரை என்பதும், தல்லாக்குளம் மற்றும் செல்லூர் காவல் நிலையங்களில் இவர் மீது அடிதடி வழக்குகள் சில நிலுவையில் உள்ளது என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து போதை ஆசாமி பிரின்ஸ் பேட்ரிக் மீது வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

குடிபோதையில் தொடர் குற்றங்கள் நிகழ்ந்து வருவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. அதேபோல குற்றங்களுக்கான முக்கியக் காரணங்களாக மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget