மேலும் அறிய

எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் உயிருக்கு போராடி வருகிறார். உடல் அருந்திய மூன்றாவது நபர் மாயமான நிலையில், அவரை தேடி வருகின்றனர்.

ஒரகடம் அருகே போதைக்காக தின்னரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வந்ததன் விளைவாக கடுமையான ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது . இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது .அதேபோல தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டது . கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமையின் தளர்வில் கூட டாஸ்மார்க் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை . இதன் எதிரொலியாக மது குடிப்போர் மது கிடைக்காமல் கள் அல்லது கள்ளச்சாராயம் அல்லது போலி மது ஆகியவற்றை வாங்கி பருகுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள் . தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சிய  பலர் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற  வருகிறது.  போதைக்காக சிலர் சில சமயங்களில் ஆதாரமற்ற முயற்சிகளை மேற்கொண்டு அதனால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது. 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதனால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் எலுமிச்சை பழச்சாறை பிழிந்து குடித்து வந்துள்ளார். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இந்நிலையில் நேற்று போதைக்காக தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சிவசங்கரன்,சுரேஷ், கிருஷ்ணன் ஆகிய நபர்களுடன் இணைந்து கூட்டாக எலுமிச்சை பழம் சாறு பிழிந்து தின்னர் என்னும் ரசாயனத்தை குடித்து உள்ளனர். இதில் சங்கருக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மேலும் ஷங்கரின் நண்பர்களான கிருஷ்ணன் மற்றும் சிவசங்கர் ஆகியோரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் சிவசங்கர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்.
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இவர்களுடன் சேர்ந்து ரசாயனத்தை குடித்த மற்றொரு நபரான சுரேஷ் என்ன ஆனார் என்பது கிராம மக்களுக்கு தெரியவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே சுரேஷ் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
 
இதுகுறித்து அரசு மனநல மருத்துவரிடம் கேட்டபோது , ‛மது குடிப்போர் ஊரடங்கின் பொழுது மதுவைப் பற்றி நினைக்காமல் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவு செய்தல் மற்றும் தியானம் செய்தல் ஆகியவற்றை மூலமாக மதுவை மறப்பதற்கு இந்த ஊரடங்கை  பயன்படுத்திக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம் சார்பில் 24 மணி நேரம் மனநல மருத்துவர்கள் மூலம் மது குடிப்போர் அதிலிருந்து மீள்வதற்கு வழி வழிமுறைகளை செல்போன் மூலமாக பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது,’’ என 
தெரிவித்தார்.
எலுமிச்சையில் புதுவித போதை; ஒருவர் பலி, மற்றொருவர் கவலைக்கிடம், இன்னொருவர் மாயம்!
மேலும் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் 7200953536 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மதுவிலிருந்து விடுபடம் வழிகளை கேட்டறியலாம். என்றும் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Mahindra Thar Record Sales: விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
விற்பனையில் தாறுமாறு செய்த தார்.! ஜாக்பாட் அடித்த மஹிந்திரா.! இத்தனை லட்சம் யூனிட்டா.? முழு விவரம்
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
Embed widget