மேலும் அறிய

ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகனை குத்திக் கொலை செய்த சித்தப்பா - உசிலம்பட்டியில் பரபரப்பு

கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக அண்ணன் மகனை சித்தப்பா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி, விவசாய கூலி தொழிலாளியான இவரது தந்தை அய்யங்காளை இவர்களது கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த குல தெய்வ கோவிலில் பக்தர்கள் அடிக்கடி நேர்த்திக்கடனுக்காக கிடா வெட்டி பூஜைகள் செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆட்டுத் தலையால் பரபரப்பு:

அவ்வாறு கிடா வெட்டி பூஜை செய்யும் போது வெட்டப்படும் ஆட்டின் தலை மற்றும் கால்கள் கோவிலின் பூசாரிக்கு காணிக்கையாக வழங்கப்படுவது ஆதிகாலம் முதல் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இந்த கோவிலில் சில பக்தர்கள் கிடா வெட்டி பூஜைகள் செய்த போது ஆட்டின் தலை மற்றும் கால்களை பூசாரி அய்யங்காளை வெளியே சென்றிருந்தால் அவரது தம்பியான பெரியகருப்பனிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.

ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகனை குத்திக் கொலை செய்த சித்தப்பா - உசிலம்பட்டியில் பரபரப்பு
 
பூசாரிக்கு கொடுக்கப்படும் காணிக்கையை அவரது தம்பியிடம் கொடுத்தது குறித்து பூசாரி அய்யங்காளையின் மகனான அய்யர்பாண்டி என்பவர் தனது சித்தப்பாவிடம் இருவரும் இணைந்து மது அருந்தி கொண்டிருந்த போது முறையிட்டு சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையை அக்கம் பக்கத்தினர் விலகி விட்ட நிலையில் இந்த பிரச்சனையால் ஆத்திரமடைந்த பெரியகருப்பன், தனது அண்ணன் மகனான அய்யர்பாண்டியை அவர் தோட்டத்து பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிச் சென்றார்.

ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகனை குத்திக் கொலை செய்த சித்தப்பா - உசிலம்பட்டியில் பரபரப்பு
 

குத்திக்கொலை:

இதில் தலை,  உடல் உள்ளிட்ட 5 இடங்களில் காயம் ஏற்பட்டு பலத்த காயமடைந்த அய்யர்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே அய்யர்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெரிய கருப்பனை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனது மகள் வீட்டில் பதுங்கி இருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த பெரியகருப்பனை வரும் வழியிலேயே போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக அண்ணன் மகனை சித்தப்பா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget