மேலும் அறிய

ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகனை குத்திக் கொலை செய்த சித்தப்பா - உசிலம்பட்டியில் பரபரப்பு

கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக அண்ணன் மகனை சித்தப்பா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எம்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யர்பாண்டி, விவசாய கூலி தொழிலாளியான இவரது தந்தை அய்யங்காளை இவர்களது கிராமத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த குல தெய்வ கோவிலில் பக்தர்கள் அடிக்கடி நேர்த்திக்கடனுக்காக கிடா வெட்டி பூஜைகள் செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆட்டுத் தலையால் பரபரப்பு:

அவ்வாறு கிடா வெட்டி பூஜை செய்யும் போது வெட்டப்படும் ஆட்டின் தலை மற்றும் கால்கள் கோவிலின் பூசாரிக்கு காணிக்கையாக வழங்கப்படுவது ஆதிகாலம் முதல் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி இந்த கோவிலில் சில பக்தர்கள் கிடா வெட்டி பூஜைகள் செய்த போது ஆட்டின் தலை மற்றும் கால்களை பூசாரி அய்யங்காளை வெளியே சென்றிருந்தால் அவரது தம்பியான பெரியகருப்பனிடம் கொடுத்தாக கூறப்படுகிறது.

ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகனை குத்திக் கொலை செய்த சித்தப்பா - உசிலம்பட்டியில் பரபரப்பு
 
பூசாரிக்கு கொடுக்கப்படும் காணிக்கையை அவரது தம்பியிடம் கொடுத்தது குறித்து பூசாரி அய்யங்காளையின் மகனான அய்யர்பாண்டி என்பவர் தனது சித்தப்பாவிடம் இருவரும் இணைந்து மது அருந்தி கொண்டிருந்த போது முறையிட்டு சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையை அக்கம் பக்கத்தினர் விலகி விட்ட நிலையில் இந்த பிரச்சனையால் ஆத்திரமடைந்த பெரியகருப்பன், தனது அண்ணன் மகனான அய்யர்பாண்டியை அவர் தோட்டத்து பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிச் சென்றார்.

ஆட்டுத் தலைக்காக அடிதடி! அண்ணன் மகனை குத்திக் கொலை செய்த சித்தப்பா - உசிலம்பட்டியில் பரபரப்பு
 

குத்திக்கொலை:

இதில் தலை,  உடல் உள்ளிட்ட 5 இடங்களில் காயம் ஏற்பட்டு பலத்த காயமடைந்த அய்யர்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியிலேயே அய்யர்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெரிய கருப்பனை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள தனது மகள் வீட்டில் பதுங்கி இருந்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த பெரியகருப்பனை வரும் வழியிலேயே போலீசார் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடா வெட்டின் போது ஆட்டின் தலைக்காக அண்ணன் மகனை சித்தப்பா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget