மேலும் அறிய
பங்குச்சந்தையில் இரு மடங்கு லாபம்.. 24 கோடி ரூபாய் மோசடி - 1500 பேர் ஏமாந்தது எப்படி?
பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில் 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையினை வழங்கியுள்ளனர்.

பங்குச்சந்தை (கோப்புப்படம்)
குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 1500 நபர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக காவலர் மற்றும் அவரது மனைவி மீது பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
குயின் டிரேடிங் - லாபம் அதிகம்
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் ஹரிணி ஆறுமுகம் நகர் 2-வது தெருவை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் ரமேஷ் தங்கராஜ் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் QUEEN டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் தருவதாக கூறி விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தியுள்ளனர். இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களிடம் தலா குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் முதலாக 20 லட்சம் வரை முதலீடு பெற்றுள்ளனர்.
புகார் செய்யப்பட்டுள்ளது
மேலும் மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இவர்களுடைய பங்குச்சந்தையில் முதலீடு செய்த நிலையில் 3 மாதங்களான முதலீட்டிற்கான லாப தொகையினை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லாபம் இல்லாத நிலையில் பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக இருவரும் கூறிய நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இருவரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போனில் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டதாகவும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட முதலீட்டார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளோம். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் ஒவ்வொருவரும் 20 லட்சம் ரூபாய் வரையும் ஏமாற்றமடைந்து நிற்கிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுடைய பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபடுவோம்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலீட்டாளர்கள், ரமேஷ் புதூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்ததால் அவரை நம்பி பணம் செலுத்தினோம். ஆனால் அவரும் அவரது மனைவியும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள். எனவே எங்களுடைய பணத்தை கிடப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இல்லையெனில் முதலீட்டாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - விருதுநகரில் வேலை வாய்ப்பு முகாம்... எப்போ? எங்கே? - முழு விவரம் இதோ
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பட்டாவ நீங்களே வச்சுகங்க” - மதுரையில் மாற்றுத்திறனாளி படும் அவஸ்தை
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement