மேலும் அறிய

மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!

தலைமறைவாக இருந்த பூபாலனையும், அவரது தந்தை செந்தில்குமரனையும் நேற்று பணியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தொடரும் வரதட்சணை கொடுமை
 
திருமணத்திற்குப் பின்னரும் பெண்கள் அனுபவிக்கும் வரதட்சணை கொடுமை, காலம் கடந்தாலும் இன்னும் ஒழியாத அவலமாக தொடர்கிறது. இதன் உதாரணமாய் தற்போது மதுரையில் நடைபெற்றுள்ள ஒரு மிரளவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றும், இரண்டு குழந்தைகளுக்கு தாயான 30 வயது பெண், திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரின் வரதட்சணை கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
 
காவல்துறையில் பணி செய்தும் தொடர்ந்த கொடுமை
 
அவரது கணவர் பூபாலன், மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை செந்தில்குமார், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும், திருமணத்தின்போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்துடன் கூடவே, மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், நகை கூடுதலாக வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளனர். காவலர் பூபாலன் தனது மனைவியை கடுமையாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் தன் தங்கையிடம் தன் மனைவியை எவ்வாறு கொடுமைப்படுத்தினேன் என்பதை தொலைபேசி வாயிலாக எடுத்துரைத்திருக்கிறார். இதில் குற்றவாளிகளை எப்படி காவலர்கள் கொடுமையாக கையாளுவார்களோ அதே போல் தன் மனைவியை தன் சித்திரவதை செய்ததாகவும் கூறுகிறார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நான்கு நபர்கள் மீது குற்றச்சாட்டு
 
இளம்பெண் வழங்கிய புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புகாரில், இளம்பெண்ணின் கணவர் மற்றும் அப்பன் திருப்பதி காவலராக பணியாற்றும் பூபாலன், அவரது தந்தை சாத்தூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் செந்தில்குமரன், மாமியார் விஜயா மற்றும் நாத்தனார் அனிதா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
 
தனிப்படை அமைப்பு
 
இவர்கள் நால்வரும் தலைமறைவாக இருந்த நிலையில், மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில், ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் அடங்கிய தனிப்படை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டது.
 
காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
 
இதையடுத்து, தலைமறைவாக இருந்த பூபாலனையும், அவரது தந்தை செந்தில்குமரனையும் பணியிடை நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று காவலர் பூபாலனை தனிப்படை போலீசார் திருப்பூரில் வைத்து கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Mamata Banerjee: ”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
”என்ன நிறுத்தனும்னா, நீங்க என்ன கொல்லனும்” துரோகிகளுக்கு மாம்தா பானர்ஜி வார்னிங்
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
90 ஆயிரம் வரை தள்ளுபடி... Wagon R முதல் Swift வரை.. பட்ஜெட் கார்களுக்கு மாருதி சுசுகி மெகா ஆஃபர்!
Tata EV Discounts: ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
ரூ.3.35 லட்சம் தள்ளுபடி..! 170KM டூ 627KM ரேஞ்ச் மின்சார கார்களுக்கு சலுகை - டாடா பஞ்ச் டூ கர்வ் வரை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
Embed widget