மேலும் அறிய

Crime: மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள்!

வீட்டின் கண்ணாடி, பீரோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு வந்த விஜய குமாரை அந்த கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

சேலம் மாநகர் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் விஜய குமார், மாநகராட்சி துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வேலை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் விஜய குமார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இதனை தடுத்த 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக குத்து காயத்துடன் கிடந்த விஜய குமார் மற்றும் காயமடைந்த 6 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய குமார் உயிரிழந்தார். காயமடைந்த கணேஷ், சுகவனேஸ்வரன், மேரி, கோவிந்தராஜ், ஜான் ஆகிய 5 பேர் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி கிச்சிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், தண்டி ஜெயக்குமார் மற்றும் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த சிவா ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

Crime: மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள்!

தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, பிரபல ரவுடி சூரியின் மகனான குட்டியப்பனுக்கும் அதே எஸ்எம்சி காலனியை சேர்ந்த ரவுடிகளான அண்ணன் தம்பிகள் ஜான், சாரதி ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான், சாரதி ஆகியோர் குட்டியப்பனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரியின் மகன்கள் இந்த தகராறுக்கு காரணம் யார் என விசாரித்தனர். அதில், மாநகராட்சி துப்புரவுபணியாளர் விஜய குமாரின் மகனான சூர்யா என்பவர் தான் இந்த தகராறுக்கு காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து அவரை தேடி, சூரியின் மகன்கள் 4 பேர் உள்பட 8 பேர் விஜயகுமார் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் வீட்டின் கண்ணாடி, பீரோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு வந்த விஜய குமாரை அந்த கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

Crime: மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள்!

இந்த வழக்கு சேலம் 3 வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட டெனிபா. சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், ஜெயக்குமார், சிவா ஆகிய 8 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கொலை வழக்கில் 8 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர் மாலை 3 மணிக்கு அவர்களுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார். அதன்படி குற்றவாளிகள் 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டார். தீர்ப்பை கேட்டதும் அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். நீதிமன்றத்தில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஐம்பதற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget