மேலும் அறிய

Crime: மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள்!

வீட்டின் கண்ணாடி, பீரோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு வந்த விஜய குமாரை அந்த கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.

சேலம் மாநகர் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் விஜய குமார், மாநகராட்சி துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வேலை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் விஜய குமார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இதனை தடுத்த 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக குத்து காயத்துடன் கிடந்த விஜய குமார் மற்றும் காயமடைந்த 6 பேரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய குமார் உயிரிழந்தார். காயமடைந்த கணேஷ், சுகவனேஸ்வரன், மேரி, கோவிந்தராஜ், ஜான் ஆகிய 5 பேர் சிகிச்சை பெற்றனர். இதுபற்றி கிச்சிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிச்சிப்பாளையத்தை சேர்ந்த டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், தண்டி ஜெயக்குமார் மற்றும் சீலநாயக்கன் பட்டியை சேர்ந்த சிவா ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

Crime: மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள்!

தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்தபோது, பிரபல ரவுடி சூரியின் மகனான குட்டியப்பனுக்கும் அதே எஸ்எம்சி காலனியை சேர்ந்த ரவுடிகளான அண்ணன் தம்பிகள் ஜான், சாரதி ஆகியோருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான், சாரதி ஆகியோர் குட்டியப்பனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சூரியின் மகன்கள் இந்த தகராறுக்கு காரணம் யார் என விசாரித்தனர். அதில், மாநகராட்சி துப்புரவுபணியாளர் விஜய குமாரின் மகனான சூர்யா என்பவர் தான் இந்த தகராறுக்கு காரணம் என தெரிய வந்தது. இதையடுத்து அவரை தேடி, சூரியின் மகன்கள் 4 பேர் உள்பட 8 பேர் விஜயகுமார் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு யாரும் இல்லாததால் வீட்டின் கண்ணாடி, பீரோ மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டில் இருந்து வெளியே வந்த போது அங்கு வந்த விஜய குமாரை அந்த கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.

Crime: மாநகராட்சி துப்புரவு பணியாளர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 8 பேருக்கு ஆயுள்!

இந்த வழக்கு சேலம் 3 வது கூடுதல் அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ராமஜெயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட டெனிபா. சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், ஜெயக்குமார், சிவா ஆகிய 8 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் கொலை வழக்கில் 8 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். பின்னர் மாலை 3 மணிக்கு அவர்களுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தார். அதன்படி குற்றவாளிகள் 8 பேருக்கும் ஆயுள் தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதிட்டார். தீர்ப்பை கேட்டதும் அவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரையும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். நீதிமன்றத்தில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஐம்பதற்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget