மேலும் அறிய

மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

’’நரேஷ் குமார் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும்  மேற்கு வங்கத்திற்கு ராணுவப்பணிக்கு சென்று சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்’’

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகர் காலனியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் நரேஷ்குமார் (40)   மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சசிகலா (36) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.  நரேஷ் குமாருக்கும், அவரது மனைவி சசிகலாவிற்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்த நிலையில் ஊர் மக்கள் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தனது மாமனார் மகாலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நரேஷ்குமார் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண்  அடைந்தார்.  இந்த நிலையில் சேலம் மத்திய சிறையில் இருந்து நரேஷ் குமார் ஜாமீனில் விடுதலையான நிலையில், மீண்டும்  மேற்கு வங்கத்திற்கு ராணுவப்பணிக்கு சென்று சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.  

மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை  - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி பண்ணந்தூர் பகுதிக்கு நரேஷ்குமார் வந்த நிலையில்  இதை அறிந்த அவரது மனைவி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள், நரேஷ்குமாரை சுற்றி வளைத்து கட்டையால் தாக்கி உள்ளனர். இதுமட்டுமின்றி நரேஷ் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயம் அடைந்த நரேஷ்குமாரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்த பாரூர் காவல்துறையினர் தற்போது இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உள்ளனர்.

மாமனாரை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராணுவவீரர் வெட்டிக்கொலை  - மனைவி உட்பட 7 பேருக்கு வலைவீச்சு

இந்த கொலை வழக்கு தொடர்பாக பாரூர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் ராணுவ வீரர் பரமேஸ்வரன் (38), நரேஷ்குமாரின் மனைவி சசிகலா, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மகேஸ்வரன் (30), பரமேஸ்வரனின் மனைவி தீபா (35), மகேஸ்வரனின் மனைவி ராஜகுமாரி (27), வடிவேல் (30), சதீஷ் (27) ஆகிய 7 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். பட்ட பகலில் நடுரோட்டில் சொந்த மனைவியே கட்டிய கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget