மேலும் அறிய

கரூர்: வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் - மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம். குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்.

பனியன் கம்பெனியில் வேலை செய்தார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 29). இவருக்கு திருமணம் ஆகி சத்யா என்ற மனைவியும், தனுஸ்ரீ என்ற 8-வயதுடைய ஒரு மகளும் உள்ளார். குமார் ஈரோடு பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் டைலராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினரான குன்னம்பட்டியை சேர்ந்த சிவா என்பவரின் தாத்தா, கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதற்காக குமார் ஈரோட்டில் இருந்து தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது குமாரின் உறவினரான ஜெகதாபி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர், அன்று  இரவு 9 மணி அளவில் அதே ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவாவை பார்க்க வேண்டும் என கூறி, குமாரை தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

 


கரூர்: வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் - மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

 

விபத்தில் காயம்

மாயனூர் அருகே உள்ள மதுக்கரை கரட்டுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதில் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மணிகண்டன், குமாரை அங்கேயே அமர வைத்துவிட்டு, மணவாசி பகுதியில் இருந்த சிவாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், காயம் அடைந்த குமாரை அதே மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, கரையாம்பட்டியில் உள்ள குமாரின் மாமனார் வீட்டின் முன்பாக அவரை போட்டுவிட்டு சிவாவும், மணிகண்டனும் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

 


கரூர்: வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் - மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

 

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் குமாரின் மாமியார் பாக்கியம் வெளியே வந்து பார்த்த போது, குமார் காயம் அடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போடவே, அங்கு வந்த உறவினர்கள் குமாரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதை எடுத்து தோகைமலை போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள்  கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குமாரின் உடல்  இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. அதுபோல் மணிகண்டன், சிவா ஆகிய இருவரும் அரசு மருத்துவமனைக்கு வராமல் இருந்துள்ளனர்.

சாலை மறியல்

இதனால் சந்தேகம் அடைந்த குமாரின் உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல்  அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களை சமாதானப்படுத்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் அழைத்துச் சென்றனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்தார். அப்போது தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக சிவா மற்றும் மணிகண்டன் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.அதனை பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு  ஸ்ரீதர், இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதனை ஏற்று குமாரின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர்.

 


கரூர்: வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் - மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்

 

உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதனை தொடர்ந்து, குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் குமாரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. குளித்தலை அரசு மருத்துவமனையின் முன்பு நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget