மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kanchipuram Accident : பெருஞ்சோகம் .. ஆடித்திருவிழாவுக்கு இடையில் நடந்த பயங்கரம்.. காஞ்சிபுரத்தை நடுங்கவைத்த விபத்து..
Kanchipuram Kovil Accident "சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக 8 நபர்களும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் "
![Kanchipuram Accident : பெருஞ்சோகம் .. ஆடித்திருவிழாவுக்கு இடையில் நடந்த பயங்கரம்.. காஞ்சிபுரத்தை நடுங்கவைத்த விபத்து.. Kanchipuram, a car lost control and rammed into a festival procession, killing one person and eight others were admitted to the Kanchipuram Government Hospital with serious injuries. Kanchipuram Accident : பெருஞ்சோகம் .. ஆடித்திருவிழாவுக்கு இடையில் நடந்த பயங்கரம்.. காஞ்சிபுரத்தை நடுங்கவைத்த விபத்து..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/eac0c35ea461486354bc6f66c7cc38fc1692493291550113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆடித்திருவிழா ஊர்வலத்தில் புகுந்த விபத்து
காஞ்சிபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஆடித்திருவிழா ஊர்வலத்தில் புகுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ கரிக்கினில் அமர்ந்தவள் திருக்கோயிலில்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் செக்குப்பேட்டை கவரை தெருவில் உள்ள ஜெய விநாயகர் ஆலயத்தில் ஆடி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நேற்று இரவு மாட்டு வண்டியில் கரிக்கினில் அமர்ந்தவள் ( Karukinil Amarnthaval Temple, Kanchipuram ) அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்று வந்தது. பாவாஜி தெரு வீதியாக ஊர்வலம் வந்திருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கார் ஓட்டி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாமி வீதி உலாவில் மோதி விபத்துக்குள்ளானது.
![Kanchipuram Accident : பெருஞ்சோகம் .. ஆடித்திருவிழாவுக்கு இடையில் நடந்த பயங்கரம்.. காஞ்சிபுரத்தை நடுங்கவைத்த விபத்து..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/2dc34c3d9d5fae9af68927708250483e1692493198567113_original.jpg)
எட்டு நபர்கள் படுகாயம்
இதில் வெங்கடேசன், மதன்ராஜ் , அக்பர் பாஷா , சுகுமார், ஞானப்பிரகாசம், தனுஷ் , குரு பிரசாத், சரண் , ஞானசேகர் ஆகிய 9 பேர் பலத்த காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தார். மேலும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக 8 நபர்களும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![Kanchipuram Accident : பெருஞ்சோகம் .. ஆடித்திருவிழாவுக்கு இடையில் நடந்த பயங்கரம்.. காஞ்சிபுரத்தை நடுங்கவைத்த விபத்து..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/20b798cb6e82b7a2473dcecb319571ed1692493158478113_original.jpg)
வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரணை
விபத்து குறித்து விஷ்ணு காஞ்சி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தும் , அதன் ஓட்டுனர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடித் திருவிழா ஊர்வலத்தில் கார் புகுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
![Kanchipuram Accident : பெருஞ்சோகம் .. ஆடித்திருவிழாவுக்கு இடையில் நடந்த பயங்கரம்.. காஞ்சிபுரத்தை நடுங்கவைத்த விபத்து..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/20/68aa0cdbc510fd42e1993ad18c21975e1692493223780113_original.jpg)
கோவில் ஊர்வலத்தின் பொழுது, அம்மன் உற்சவத்தில் கொடூரமாக இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்து பெரும் சோகத்தை காஞ்சிபுரம் பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion