மேலும் அறிய

Crime: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் மர்ம மரணம்! சடலமாக மீட்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்! என்னாச்சு?

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Crime: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு:

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (42). இவரது மனைவி அலிஸ் பிரியங்கா (40). இந்ந தம்பதிக்கு நான்கு வயதில் இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா நியூ செர்சியில் வசித்து வந்துள்ளனர். கடந்த வருடம் தான் சான் மேடியோ கவுண்டியில் இவர்கள் 2.1 பில்லியன் டாலர் மதிப்பில்  வீட்டை வாங்கி குடிபெயர்ந்தனர்.   

இவர்கள் இருவரும் மெட்டா மற்றும் கூகுளில் பணிபுரிந்துள்ளனர். மெட்டாவில் பணிபுரிந்து வந்த ஆனந்த், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணியில் இருந்து விலகி, ஒரு ஐடி நிறுவனத்தை தொடங்கினார்.   இந்த நிலையில், தான்  ஆனந்த், அவரது மனைவி அலிஸ் பிரியங்கா, 2 குழந்தைகள் வீட்டில் உயிரிழந்த நிலையில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  

ஆனந்த் மற்றும் அவரது மனைவி யாரும் வீட்டில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருக்கிறார்.  இதனை அடுத்து, வீட்டிற்குள் சென்ற ஒருவர் 4 பேர் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்த்தபோது, ஆனந்த மற்றும் அவரது மவி பிரியங்கா பாத்ரூமில் துப்பாக்கிச் சுடு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளனர். இவர்களது இரண்டு குழந்தைகள் படுக்கை அறையில் இறந்துள்ளனர்.

கொலையா? தற்கொலையா?

இதனை அடுத்து, நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் சான் மேடியோ காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கொலைக்கான காரணம் குறித்தும் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "வீட்டின் கதவுகள் பூட்டி இருந்தது. வீட்டில் அனைத்து பகுதியின் கதவுகளும் மூடியிருந்தது. ஜன்னல் வழியாக அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். அப்போது 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் சடலமாக கிடந்தனர். குளியலறையில் துப்பாக்கிகளை கைப்பற்றினோம். குளியலறையில் ஆனந்த் மற்றும் அவரது மனைவி பிரியங்கா துப்பாக்கி சுடு காயங்களுடன் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலையா? கொலையா? என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.  நீதிமன்ற பதிவுகளின்படி,  2016ஆம் ஆண்டு டிசம்பரில் விவாகரத்து கோரி ஆனந்த் மனு தாக்கல் செய்தார். ஆனால், விவாகரத்து எதுவும் நீதிமன்றம் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

தூய்மையான, வெளிப்படையான, தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு!

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget