மேலும் அறிய

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவி.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலி

மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் நாகேஷ் யாதவுக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் திருமணத்தை மீறிய உறவில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தான் இப்படியான கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவலின்படி, “ ஆந்திரப்பிரதேச மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திக் நம்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட கேத்தபள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு  நாகேஷ் யாதவ் என்ற நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் நாகேஷ் யாதவுக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் நாகேஷின் மனைவிக்கு தெரிய வந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக நாகேஷூக்கும், சுஜாதாவுக்கும் இடையே சமீப காலமாக பிரச்னை வெடித்துள்ளது. 

இதனால் கடும் அதிருப்தியடைந்த சுஜாதா, தங்களுடைய உறவில் ஏற்பட்ட பிரச்னைக்கு  நாகேஷின் மனைவி தான் காரணம் என்று நினைத்து அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகேஷ் மனைவியை கொல்ல திட்டம் தீட்டினார். அதன்படி சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சுஜாதா, ​​நாகேஷின் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் சுதாரிப்பதற்குள் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நாகேஷின் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருக்கு அருகில் இருந்த அவரது ஆறு மாத குழந்தையும் பலத்த காயமடைந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்கொண்டா போலீசார், சுஜாதா மற்றும் நாகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். 

மற்றொரு சம்பவம்

இதேபோல் கள்ளக்காதல் விவகாரத்தில் விகாராபாத் மாவட்டம் மார்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட பில்கல் கிராமத்தில் மற்றொரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அங்கு சேரலா நர்சிம்லு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் திருமணத்தை மீறிய தகாத உறவே கொலைக்குக் காரணம் என சொல்லப்பட்டுள்ளது. சேரலா நர்சிம்லு தனது பண்ணைக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உள்ளூர் விவசாயி ஒருவர் பண்ணைக்குச் சென்றபோது இந்த சம்பவத்தை கண்டு உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். 

நர்சிம்லு விவசாய வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு வசந்தா என்ற மனைவியும், சாய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீஹரி என இரு மகன்களும் உள்ளனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் இது கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. 

இறந்த நர்சிம்லு, பில்கல் கிராமத்தைச் சேர்ந்த பெகாரி நர்சம்மா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது. பிரச்னை அதிகரித்ததால் மூன்று மாதங்களாக  பெகாரி நர்சம்மாவை சந்திக்காமல் நர்சிம்லு தவிர்த்து வந்தார். இதனிடையே நர்சிம்லுவை பெகாரி போனில் தொடர்பு கொண்ட நிலையில், அவரிடம் வசந்தா தன்னைக் கொன்றுவிட்டு தனது கணவருடன் வாழுமாறு தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் ஜனவரி 29ம் தேதி நர்சிம்லு இரவு 8 மணிக்கு வயலுக்குச் சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டார். வசந்தா அளித்த புகாரின் அடிப்படையில் பெகாரி நர்சம்மா, அவரது கணவர் பாப்பையா உள்ளிட்ட 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget