மேலும் அறிய

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவி.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற காதலி

மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் நாகேஷ் யாதவுக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் திருமணத்தை மீறிய உறவில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தான் இப்படியான கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவலின்படி, “ ஆந்திரப்பிரதேச மாநிலம் நல்கொண்டா மாவட்டத்திக் நம்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட கேத்தபள்ளி என்ற கிராமம் உள்ளது. இங்கு  நாகேஷ் யாதவ் என்ற நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். மகிழ்ச்சியாக இவர்களது திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் நாகேஷ் யாதவுக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்துள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் நாகேஷின் மனைவிக்கு தெரிய வந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக நாகேஷூக்கும், சுஜாதாவுக்கும் இடையே சமீப காலமாக பிரச்னை வெடித்துள்ளது. 

இதனால் கடும் அதிருப்தியடைந்த சுஜாதா, தங்களுடைய உறவில் ஏற்பட்ட பிரச்னைக்கு  நாகேஷின் மனைவி தான் காரணம் என்று நினைத்து அவரை பழிவாங்க முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகேஷ் மனைவியை கொல்ல திட்டம் தீட்டினார். அதன்படி சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற சுஜாதா, ​​நாகேஷின் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அப்பெண் சுதாரிப்பதற்குள் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நாகேஷின் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருக்கு அருகில் இருந்த அவரது ஆறு மாத குழந்தையும் பலத்த காயமடைந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நல்கொண்டா போலீசார், சுஜாதா மற்றும் நாகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர். 

மற்றொரு சம்பவம்

இதேபோல் கள்ளக்காதல் விவகாரத்தில் விகாராபாத் மாவட்டம் மார்பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட பில்கல் கிராமத்தில் மற்றொரு கொலை சம்பவம் நடந்துள்ளது. அங்கு சேரலா நர்சிம்லு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் திருமணத்தை மீறிய தகாத உறவே கொலைக்குக் காரணம் என சொல்லப்பட்டுள்ளது. சேரலா நர்சிம்லு தனது பண்ணைக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உள்ளூர் விவசாயி ஒருவர் பண்ணைக்குச் சென்றபோது இந்த சம்பவத்தை கண்டு உடனடியாக காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். 

நர்சிம்லு விவசாய வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு வசந்தா என்ற மனைவியும், சாய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீஹரி என இரு மகன்களும் உள்ளனர். முதலில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் இது கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்தது. 

இறந்த நர்சிம்லு, பில்கல் கிராமத்தைச் சேர்ந்த பெகாரி நர்சம்மா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். இது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது. பிரச்னை அதிகரித்ததால் மூன்று மாதங்களாக  பெகாரி நர்சம்மாவை சந்திக்காமல் நர்சிம்லு தவிர்த்து வந்தார். இதனிடையே நர்சிம்லுவை பெகாரி போனில் தொடர்பு கொண்ட நிலையில், அவரிடம் வசந்தா தன்னைக் கொன்றுவிட்டு தனது கணவருடன் வாழுமாறு தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் ஜனவரி 29ம் தேதி நர்சிம்லு இரவு 8 மணிக்கு வயலுக்குச் சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டார். வசந்தா அளித்த புகாரின் அடிப்படையில் பெகாரி நர்சம்மா, அவரது கணவர் பாப்பையா உள்ளிட்ட 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் ; SI - அதிரடி சஸ்பெண்ட் ! டிஐஜி அதிரடி உத்தரவு
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
மதுரையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி போக்சோவில் கைது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?
Chennai Corporation: ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
ஆட்சி மாறியதும் ஆப்சென்டான கவுன்சிலர்கள்..! முடங்கிய பணிகள்? கலக்கத்தில் சென்னை வாசிகள்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
17 வயது சிறுவனை வெட்டிக் கொன்ற கும்பல்..! கொண்டாட்டங்கள் போதும் CM சார் - அண்ணாமலை ஆவேசம்
ADMK: நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
நீங்க சொன்னா கரெக்ட்..! எடப்பாடி போட்ட ரூல்ஸ், ஒகே சொல்லி ஐக்கியமாகும் வேலுமணி டீம்? யார் அவுட்?
Petrol Diesel Price: 2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
2 வாரங்களில் 4வது முறை - பெட்ரோல் விலை ரூ.2.46, டீசல் விலை ரூ.2.57 உயர்த்தி அறிவிப்பு
TN Weather Update: வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
வடக்கு,கொங்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை நிலவரம்? தமிழக வானிலை
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
Embed widget