மேலும் அறிய

நட்பை இழந்த சோகம்... நண்பன் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!

நண்பனை பிரிந்து வாழ முடியாமல், நண்பன் சென்ற இடத்திற்கே தானும் செல்வதாக கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒருவர்

சென்னை அடுத்த்  குரோம்பேட்டை லக்ஷ்மிபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (35) இவருடைய மனைவி ராஜேஸ்வரி (28) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு  தான் வாடகைக்கு வந்துள்ளனர். சரத்குமார் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 

நட்பை இழந்த சோகம்... நண்பன் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
சரத்குமாரின் உயிர் நண்பர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். உயிர் நண்பரை இழந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருந்திருக்கிறார் சரத்குமார். துக்கத்தை மறப்பதற்காக அவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்திருக்கிறார். நேற்று இரவும் அதேபோல் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வந்து தனது படுக்கையில் படுத்திருக்கிறார். உள்பக்கமாக தாளிட்டுக்கொண்டு அவர் படுத்துவிட்டதால், வேதனையில் இருக்கும் அவரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணிய அவரது மனைவி ராஜேஸ்வரி தனது குழந்தைகளுடன் அடுத்த அறையில் தூங்கி இருக்கிறார்.

நட்பை இழந்த சோகம்... நண்பன் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
அடுத்த நாள் காலையில் விடிந்து வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஸ்வரி, அக்கம்பக்கத்தினரிடம் தெரிவிக்க, அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து கதவைத் பலமாக தட்டியபோதும் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ந்தனர். அங்கே சரத்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார் செல்வகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நட்பை இழந்த சோகம்... நண்பன் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
 
இதனையடுத்து சம்பவம் குறித்து ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தியதில், துக்கத்தில் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வேதனையில் புலம்பி வந்தார் என்று தெரிவித்துள்ளார். அவன் போன இடத்துக்கே போவேனோ என புலம்பினார் என சொல்லியிருக்கிறார். நண்பன் இறந்த தூக்கத்தினால் உயிர் நண்பனைப்போலவே தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செல்வகுமாரின் செயல் அப்பகுதியினரிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 

நட்பை இழந்த சோகம்... நண்பன் சென்ற இடத்திற்கே செல்வதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
 
இதுகுறித்து அவர் மனைவி ராஜேஸ்வரி கூறுகையில், ”என் கணவர் அதிகளவு மது போதையில் இருந்து வந்தார், என் நண்பன் சென்ற இடத்துக்கே நானும் போவேன் என கூறிக்கொண்டு இருந்தார்” என போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்.
 
 மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்க்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050.

தலைப்பு செய்திகள்

சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget