மேலும் அறிய

கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உட்பட நான்கு நபர்கள் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் மட்டுமே, அளித்து உறங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது, என நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்களது அறிக்கையின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.  


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

அதைத்தொடர்ந்து ஊரடங்கு நாட்களில் பொது நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆங்காங்கே தமிழக அரசின் விதிகளை மீறி திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் அவர்கள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுபோல் கரூர் மாவட்டத்தில் இதுபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறதா, என துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். கரூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அவர்களுக்கு ரகசிய தகவல் அடிப்படையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்  நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரி தலைமையில் மேற்படி விசாரணையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்து கொண்டனர். 

இந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள், இளைஞர் உள்ளிட்ட நான்கு நபர்களை மாவட்ட சமூகநலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (22) இவருக்கும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ,கோவிந்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் - ராஜேஸ்வரி ஆகியோரின் 16 வயது மகளான சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 7-ஆம் தேதி கரூரை அடுத்த வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அன்றிரவே முதலிரவு ஏற்பாடு செய்து நடந்துள்ளது. சிறுமிக்கு நடந்த சட்டவிரோத செயல் சம்பந்தமாக மாவட்ட சமூக நலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமிக்கு புகார் சென்றுள்ளது. புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமியை திருமணம் செய்த இளைஞர் சந்தோஷ் அவரது பெற்றோர் மணிவேல் மற்றும் ராஜேஸ்வரி, சந்தோஷ் தாய் அமுதவல்லி ஆகியோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

 கரூர் அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிக்கு பெற்றோர் திருமண நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Embed widget