மேலும் அறிய

கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூரில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உட்பட நான்கு நபர்கள் போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக கடந்த 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் மட்டுமே, அளித்து உறங்கு உத்தரவை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது, என நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தங்களது அறிக்கையின் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.  


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

அதைத்தொடர்ந்து ஊரடங்கு நாட்களில் பொது நிகழ்ச்சிகள், ஆன்மீக நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆங்காங்கே தமிழக அரசின் விதிகளை மீறி திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் அவர்கள் இல்லத்தில் நடைபெற்று வருகிறது. ஊரடங்கை பயன்படுத்தி தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுபோல் கரூர் மாவட்டத்தில் இதுபோல் குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறதா, என துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர். கரூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி அவர்களுக்கு ரகசிய தகவல் அடிப்படையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் சிறுமிக்கு திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்  நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து சமூகநலத்துறை அதிகாரி தலைமையில் மேற்படி விசாரணையில் வெண்ணைமலை முருகன் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்து கொண்டனர். 

இந்த சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த உறவினர்கள், இளைஞர் உள்ளிட்ட நான்கு நபர்களை மாவட்ட சமூகநலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மேலப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (22) இவருக்கும், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ,கோவிந்தம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் - ராஜேஸ்வரி ஆகியோரின் 16 வயது மகளான சிறுமிக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 7-ஆம் தேதி கரூரை அடுத்த வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், அன்றிரவே முதலிரவு ஏற்பாடு செய்து நடந்துள்ளது. சிறுமிக்கு நடந்த சட்டவிரோத செயல் சம்பந்தமாக மாவட்ட சமூக நலத்துறை வளர்ச்சி அலுவலர் தனலட்சுமிக்கு புகார் சென்றுள்ளது. புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமியை திருமணம் செய்த இளைஞர் சந்தோஷ் அவரது பெற்றோர் மணிவேல் மற்றும் ராஜேஸ்வரி, சந்தோஷ் தாய் அமுதவல்லி ஆகியோர் மீது குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். 


கரூர் : சிறுமியை திருமணம் செய்துகொண்ட இளைஞர் உட்பட நான்கு பேர் கைது!

 கரூர் அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிக்கு பெற்றோர் திருமண நடத்தி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget