மேலும் அறிய

கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது

கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 39, கரூர், தான்தோன்றி மலை டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த குடியரசு 22, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்தார். .இது குறித்த புகாரின் பெயரில் குடியரசை தாந்தோன்றி மலை போலீசார் கைது செய்தனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி சேர்ந்தவர் காளீஸ்வரன் 20, இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்த போது, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 28, கத்தியை காட்டி பணம் பறித்தார் . கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா 33, கரூர், அருகம்பாளையம் டாஸ்மாக் கடை அருகில்  நின்று கொண்டிருந்த போது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீ ராம் கார்த்தி 32, அவரிடம் இருந்த பர்ஸை திருடி சென்றனர்.வெங்கமேடு போலீசார் ஸ்ரீராம் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் 23, மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது, கரூர் , மாவடியன் கோவில் பகுதியை சேர்ந்த வினோத் குமார் 23, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து கரூர் டவுன் போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்மேனிடம் பணம் பறித்த திருநங்கைகள் மீது வழக்கு 

 
கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

பெட்ரோல் பங்க் வாட்ச்மேனிடம் பணம் பறித்து கொண்டு ஓடிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆறுமுகம் 73, இவர் கரூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது நிரஞ்சனா, எழில், சஞ்சனா ஆகிய திருநங்கைகள் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது வாட்ச்மேனிடமிருந்து 9,200 ரூபாய் பணத்துடன் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து வாட்ச்மேன் அளித்த புகார் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே நில தகராறு: விவசாயியை அறிவாளால் வெட்டியவர் கைது.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன் இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் சீத்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் வயது 48 என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும் அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காலை ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரி உடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

" வயது வித்தியாசம் பிடிக்கல " திருமணத்தை நிறுத்த சொன்ன 21 வயது பெண் !! இறுதியில் நடந்த கொடூரம்
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்!
விழுப்புரத்தை உலுக்கும் போதை கும்பலுக்கு செக்! "Drug Free TN" செயலியுடன் அதிரடி வேட்டைக்கு தயாராகும் மாவட்ட நிர்வாகம்!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
பள்ளி வளாகத்தில் 12ஆம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து: சிவகங்கையில் பெரும் அதிர்ச்சி!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!
விழுப்புரத்தில் அதிர்ச்சி... காலாவதி தேதிக்கு முன்பே ‘விஷமாக மாறிய’ பிரபல குளிர்பானம்...! குழந்தைகள் குடித்ததால் பரபரப்பு!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
சம்பவ இடத்திற்கு சென்ற கனிமொழி - ”சட்டசபையில பொய் சொல்லல, யாரையும் காப்பாற்ற துடிக்கல” TVK பதிலடி
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
CM Vijay: சொன்னதை செய்த விஜய்.. லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி கைது.. கட்சியில் இருந்து நீக்கம்!
TN Weather Update: 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
19 மாவட்டங்களுக்கு வெப்ப அலை வார்னிங் - சென்னையில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
முருகப் பெருமானின் சொத்தையே வளைப்பீர்களா? - முதல்வர் விஜயை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
Embed widget