மேலும் அறிய

கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது

கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 39, கரூர், தான்தோன்றி மலை டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த குடியரசு 22, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்தார். .இது குறித்த புகாரின் பெயரில் குடியரசை தாந்தோன்றி மலை போலீசார் கைது செய்தனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி சேர்ந்தவர் காளீஸ்வரன் 20, இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்த போது, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 28, கத்தியை காட்டி பணம் பறித்தார் . கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா 33, கரூர், அருகம்பாளையம் டாஸ்மாக் கடை அருகில்  நின்று கொண்டிருந்த போது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீ ராம் கார்த்தி 32, அவரிடம் இருந்த பர்ஸை திருடி சென்றனர்.வெங்கமேடு போலீசார் ஸ்ரீராம் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் 23, மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது, கரூர் , மாவடியன் கோவில் பகுதியை சேர்ந்த வினோத் குமார் 23, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து கரூர் டவுன் போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்மேனிடம் பணம் பறித்த திருநங்கைகள் மீது வழக்கு 

 
கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

பெட்ரோல் பங்க் வாட்ச்மேனிடம் பணம் பறித்து கொண்டு ஓடிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆறுமுகம் 73, இவர் கரூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது நிரஞ்சனா, எழில், சஞ்சனா ஆகிய திருநங்கைகள் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது வாட்ச்மேனிடமிருந்து 9,200 ரூபாய் பணத்துடன் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து வாட்ச்மேன் அளித்த புகார் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே நில தகராறு: விவசாயியை அறிவாளால் வெட்டியவர் கைது.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன் இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் சீத்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் வயது 48 என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும் அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காலை ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரி உடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
பெண்ணிடம் இருந்து 6 கிராம் தாலியை பறித்துச் சென்ற மர்மநபர்... பேராவூரணியில் பரபரப்பு
போதையில் வம்பு... கத்தியை எடுத்து வெறிச்செயல்! விழுப்புரத்தில் அதிமுக வார்டு செயலாளருக்கு வெட்டு
போதையில் வம்பு... கத்தியை எடுத்து வெறிச்செயல்! விழுப்புரத்தில் அதிமுக வார்டு செயலாளருக்கு வெட்டு
இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.10.80 லட்சம் மோசடி! புதுச்சேரி இளம்பெண் அதிர்ச்சி
இன்ஸ்டாகிராம் விளம்பரம் மூலம் ரூ.10.80 லட்சம் மோசடி! புதுச்சேரி இளம்பெண் அதிர்ச்சி
காலி பாட்டிலை திருப்பி கொடுத்தபோது வெடித்த மோதல்.. டாஸ்மாக் வாசலில் இளைஞர் கொடூர கொலை
காலி பாட்டிலை திருப்பி கொடுத்தபோது வெடித்த மோதல்.. டாஸ்மாக் வாசலில் இளைஞர் கொடூர கொலை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "பவளவிழா பாப்பா.. கோயில் நிலத்தை சுருட்டி பாக்கெட்டில் போட்ட திமுக.." தாறுமாறாக விமர்சித்த தவெக
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
“வேங்கைவயல் விவகாரத்தில் தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்” - வன்னியரசு அதிரடி!
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
PM மோடிக்கு CM விஜய் கடிதம்.! சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க திட்டம் - கொதித்தெழுந்த CPI
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
புரட்டாசி மாதத்தில் சைவம் ஏன்? பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை என்ன?
Gudalur Tiger : கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
கூடலூர் டைகர் ஆபரேஷன்! புலியை சிக்க வைத்த வனத்துறையின் மாஸ்டர் பிளான்- நடந்தது என்ன?
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Ajith Kumar: பத்திக்கிச்சு ஒரு ராட்சச திரி.. Dare Devil படத்தின் புதிய அப்டேட்டை தந்த அஜித்குமார்!
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
Vijay Sethupathi: பிக்பாஸ் வீட்டைத்தான் பேசுனேன்.. வேற யாரையும் பேசல.. விளக்கம் அளித்த விஜய் சேதுபதி
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
சேலத்தை இன அழிப்பு முகாமாக மாற்றத் துடிப்பதா? புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து: அன்புமணி பகீர்!
Embed widget