மேலும் அறிய

கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு - வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது

கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 39, கரூர், தான்தோன்றி மலை டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த குடியரசு 22, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்தார். .இது குறித்த புகாரின் பெயரில் குடியரசை தாந்தோன்றி மலை போலீசார் கைது செய்தனர்.
 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி சேர்ந்தவர் காளீஸ்வரன் 20, இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்த போது, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 28, கத்தியை காட்டி பணம் பறித்தார் . கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா 33, கரூர், அருகம்பாளையம் டாஸ்மாக் கடை அருகில்  நின்று கொண்டிருந்த போது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீ ராம் கார்த்தி 32, அவரிடம் இருந்த பர்ஸை திருடி சென்றனர்.வெங்கமேடு போலீசார் ஸ்ரீராம் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் 23, மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது, கரூர் , மாவடியன் கோவில் பகுதியை சேர்ந்த வினோத் குமார் 23, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து கரூர் டவுன் போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்மேனிடம் பணம் பறித்த திருநங்கைகள் மீது வழக்கு 

 
கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

பெட்ரோல் பங்க் வாட்ச்மேனிடம் பணம் பறித்து கொண்டு ஓடிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆறுமுகம் 73, இவர் கரூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது நிரஞ்சனா, எழில், சஞ்சனா ஆகிய திருநங்கைகள் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது வாட்ச்மேனிடமிருந்து 9,200 ரூபாய் பணத்துடன் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து வாட்ச்மேன் அளித்த புகார் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே நில தகராறு: விவசாயியை அறிவாளால் வெட்டியவர் கைது.


கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன் இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் சீத்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் வயது 48 என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும் அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காலை ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரி உடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget