மேலும் அறிய

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் மீது நில அபகரிப்பு புகார்...!

இருவர் பெயரில் நிலத்தை பதிவு செய்து கொடுத்த நிலையில், 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காமல் வெறும் 21 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு மீதி தொகையினையும் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சஞ்சய் குமார் ரெட்டி. வெளிநாடு வாழ் இந்தியரான இவருக்கு சொந்தமாக திருப்பூர் அருகே கண்டியன் கோவில் கிராமத்தில்  2.26  ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பண்ணை வீடு அமைத்து வந்த தொழிலதிபர் சஞ்சய் குமார் ரெட்டி, அந்த பணிகளுக்காக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகனான ஈரோடு பகுதியைச் சேர்ந்த  தினேஷ் என்பவரிடம் 50 லட்சம் பணம்  கேட்டுள்ளர். தினேஷ் அவரது உறவினர்களான தங்கராஜ் மற்றும் ஹரிபாஸ்கர் பெயரில் இடத்தை கிரையம் செய்து கொடுத்தால் 50 லட்சம் பணம்  கடன் கொடுப்பதாகவும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்த பின் மீண்டும் கிரையம் செய்து கொடுத்து விடுவதாகவும் தினேஷ்  கூறியுள்ளார். இதனை நம்பி அவர்கள் இருவர் பெயரில் நிலத்தை பதிவு செய்து கொடுத்த நிலையில், 50 லட்ச ரூபாய் பணத்தை கொடுக்காமல் வெறும் 21 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு மீதி தொகையினையும் கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

மீதி பணம் கேட்கும் போதெல்லாம் உரிய பதில் அளிக்காமல் தினேஷ்  காலம்  தாழ்த்தி வந்ததாகவும்,  இதனையடுத்து தினேசிடம் வாங்கிய 21 லட்சத்தை திருப்பி கொடுத்து விடுகின்றேன், பேசிய படி நிலத்தை தனது பெயருக்கே மாற்றி கொடுத்து விடும்படி தொழிலதிபர் சஞ்சய் குமார்ரெட்டி கேட்டுள்ளார். ஆனால் அதை கேட்காமல் தினேஷ் தனது உறவினர்கள் மூலம் அந்த இடத்தை வேறு நபர்களுக்கு  விற்க முயலவே, இது குறித்து சஞ்சய்குமார் ரெட்டி  திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷ் மீது நில அபகரிப்பு புகார்...!

இந்நிலையில் இன்று கோவை பதிவு துறை துணை தலைவர் அலுவலகத்தில் தொழிலதிபர் சஞ்சய் குமார் ரெட்டியின் வழக்கறிஞர் சார்பில் மனு  அளிக்கப்பட்டது. அந்த மனுவில் ஹரிபாஸ்கர், தங்கராஜ் ஆகியோர் பெயரில் கடன் தொகைக்காக போடப்பட்ட கிரைய பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், வேறு எந்த நபரின் பெயர்களுக்கும் கிரையம் செய்து கொடுக்க கூடாது எனவும் பதிவுத்துறை துணைதலைவர் அலுவலகத்தில் இன்று தடங்கல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் பேசிய வழக்கறிஞர் விஜயகுமார், ”தினேஷ் கடன் தொகைக்காக போடப்பட்ட கிரைய பத்திரம் மூலம் வேறு நபர்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முயற்சிக்கிறார். பணத்தை திருப்பி கேட்ட போது அரசியல் காரணங்களை கூறி, காலம் தாழ்த்தினார். வேறு நபரின் பெயர்களில் நிலம்  பதிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக முதலில் சிவில் நடைமுறைகளை பின்பற்றி உள்ளோம். குற்றவியல் நடைமுறைகளின் படியும் அடித்தடுத்து தினேஷ் மீது புகார் அளித்து  நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் வழக்கறிஞர் விஐயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மருமகன் தினேஷை தொடர்பு கொண்ட போது, அவரது எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget