மேலும் அறிய

குடோனுக்குள் ஒரு ஃபேக்டரி! 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்! ஷாக்கான போலீஸ்!

டீசல் மீன்பிடி படகுகளில் உபயோகப்படுத்தும் போது படங்களில் உள்ள இன்ஜின் பழுது ஏற்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் கலப்பட டீசல் விற்பனையானது நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக மீனவர்கள் கடலுக்கு செல்ல படகுகளுக்கு இந்த வகை கலப்பட டீசல் உபயோகபடுத்துகின்றனர். இது சந்தையில் விற்பனை செய்யபடும் டீசலை விட விலைகுறைவாக கிடைப்பதால் இதனை அவர்கள் அதிக அளவில் உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமீப காலங்களாக தூத்துக்குடியில் இந்த பயோ டீசல் அதிக அளவில் விற்கபடுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் 3 தனிப்படைகள் அமைத்து பயோ டீசல் விற்பனை செய்பவர்களை கண்காணித்து வந்தார். 


குடோனுக்குள் ஒரு ஃபேக்டரி! 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்! ஷாக்கான போலீஸ்!

இந்நிலையில் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு குடோனில் கலப்பட டீசல் பதுக்கி வைக்கபட்டுள்ளதை அறிந்த போலிசார் அங்கு விரைந்து சென்றனர். அருண் என்பவருக்கு சொந்தமான அந்த குடோனை சோதனையிட்டதில் அங்கு கலப்படம் செய்து கொண்டிருந்த டீசல் டேங்கர் லாரி, டீசலை அங்கிருந்து எடுத்து செல்ல பயன்படுத்திய சிறிய லோடு வேன்,  அதனுடன் டீசல் பேரல்கள் மற்றும் சின்டெக்ஸ் டேங்குளும் இருப்பதை கண்டறிந்தனர். அத்துடன் அங்கு இருந்த ராஜகோபால், புஷ்பராஜ், ராமசாமி, பிரவீன், பவுல் அந்தோணி மற்றும் டேனி ஆகியோரை கைது செய்த போலிசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் அங்கிருந்த 40 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல், கடத்தலுக்கு பயன்படுத்திய டேங்கர் லாரி, உட்பட சுமார் 80 லட்சம் அளவிலான பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்தனர்.


குடோனுக்குள் ஒரு ஃபேக்டரி! 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்! ஷாக்கான போலீஸ்!

அப்போது ஏ எஸ் பி சந்தீஷ் டேனியல் என்பவரிடம் விசாரனை செய்து கொண்டிருந்தார். டேனியல் டீசலுக்கான பில்லை காட்டுவதாக கூறியபடி அங்கிருந்து நழுவி தப்பியோட முயன்றார். இதனை கண்ட தனிப்படை போலிசார் தப்பியோடிய டேனியை காட்டுக்குள் துரத்தி சென்று பிடித்து வந்தனர். மேலும் மற்றொரு குற்றவாளியான வேலுவை போலிசார் தேடி வருகின்றனர்.மேலும் இதில் போலிஸ் விசாரணையில் தப்பியோடி போலீசாரால் விரட்டி பிடிக்கபட்ட தூத்துக்குடி மீனவரணி அமைப்பாளரான டேனியல் தூத்துக்குடி 24 வது வார்டு பெண் திமுக கவுன்சிலர் மெட்டில்டா என்பவரது கணவர் என்பது குறிப்பிடதக்கது.


குடோனுக்குள் ஒரு ஃபேக்டரி! 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்! ஷாக்கான போலீஸ்!

இது குறித்து தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் சந்திஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கலப்பட டீசல்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வந்ததை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன படகளுக்கு இந்த டீசல் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது எங்கிருந்து வருகிறது என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன இதில் தூத்துக்குடி சிப்காட் அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் வைத்து கலப்பட டிசைன் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது பெங்களூரில் இருந்து 20000 லிட்டர் டீசல் எந்தவித ஆவணங்களமின்றி திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு அவை இந்த குடோனில் வைக்கப்பட்டு அதோடு மண்ணெண்ணெய் உள்ளிட்ட சில சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்பட்டு டீசல் தயாரிக்கப்படுகிறது. 


குடோனுக்குள் ஒரு ஃபேக்டரி! 40ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்! ஷாக்கான போலீஸ்!

இந்த குடோனில் ஒரு பெரிய தொழிற்சாலை போன்று கலப்பட டீசல் தயாரிக்கப்படுகிறது இந்த கலப்பட டீசல் மிகவும் ஆபத்தானது இவர்கள் இதனை ஆபத்தான முறையில் கையாண்டு வருகின்றனர் என்று  கூறிய அவர்,இங்கு தயாரிக்கப்படும் டீசலானது தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீன்பிடி படகுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது அரசு மீன்பிடி படங்களுக்கு டீசல் மானியம் வழங்கினாலும் அவர்களுக்கு அதிகமான டீசல் தேவைப்படும் சூழ்நிலையில் இங்கிருந்து இந்த டீசலை வாங்குகின்றனர் இந்த டீசல் ஆனது வெளிச்சந்தையில் கிடைக்கும் டீசலை விட விலை குறைவாக உள்ளதால் மீனவர்கள் இதனை வாங்குகின்றனர் என்று அவர் கூறினார். 

இந்த டீசல் மீன்பிடி படகுகளில் உபயோகப்படுத்தும் போது படங்களில் உள்ள இன்ஜின் பழுது ஏற்படும் என்ற எச்சரிக்கையும் அவர் விடுத்தார் இந்த இந்த கலப்பட டீசல் பயன்படுத்துவதால்  தொழிற்சாலையை விட கடல் பகுதி அதிகம் மாசு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கலப்பட டீசல் தயாரிக்கும் செயலில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவரிடமிருந்து 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக இவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் தடை சட்டத்தின் மேல் இது நடவடிக்கை எடுக்கப்படும் இந்த கலப்பட டீசல் தயாரிப்பது விநியோகம் செய்வது மூலமாக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் வரி இழப்பீடு ஏற்படுகிறது என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget