மேலும் அறிய

தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 3 கொலைகள்..அரூர் அருகே பாலத்தின் அடியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு

அரூர் அருகே பாலத்தின் அடியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி. அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் புகார். காவல்துறை விசாரணை.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஜம்மனஹள்ளி கிராமத்தைச் சார்ந்த செல்வம் தச்சு தொழில் செய்து வருகிறார். கோவையில் தச்சு தொழில் செய்து வரும் செல்வம் மாதத்திற்கு ஒரு முறை, பெற்றோரை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கோவையிலிருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது தனது நண்பர்களான சரவணன், செல்வம், ரகு, பிரகாஷம் ஆகியோருடன் இணைந்து ஜம்மனஹள்ளியில் உள்ள பாலத்தின் மீது அமர்ந்து மது அருந்துள்ளனர். மேலும் இரவு முழுவதும் செல்வம் வீட்டிற்கு வராமல், நண்பர்களோடு இருந்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் காலை பாலத்திற்கு அடியில் செல்வம் சடலமாக கிடந்ததை பள்ளிக்கு வந்த அவரது தம்பி மகன் பார்த்துள்ளார்.  இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், செல்வத்தை மீட்டுள்ளனர். அப்பொழுது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது.  அதேபோல் காதில் ரத்தம் வந்த நிலையிலே இருந்துள்ளது. இதனால் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வம் உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலை, முகம், கை, கால்கள் உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாலும், காதில் ரத்தம் வந்த நிலையில் இருந்ததாலும், செல்வத்தை யாரோ அடித்து கொலை செய்து பாலத்திற்கு அடியில் வீசி இருக்கலாம். எனவே செல்வத்துடன் மது அருந்திய நண்பர்களை விசாரணை செய்ய வேண்டும். செல்வம் தவறி விழுந்து இறப்பதற்கு சாத்தியம் இல்லை. கொலை செய்து வீசி இருக்கிறார்கள் என உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் 3 நாட்களில் 3 கொலைகள்..அரூர் அருகே பாலத்தின் அடியில் கிடந்த சடலத்தால் பரபரப்பு
 
இதனை தொடர்ந்து செல்வத்தின் நண்பர்களான சரவணன், செல்வம், ரகு, பிரகாஷ், ஆகிய  நான்கு பேரையும் கோபிநாதம்பட்டி கூட்ரோடு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் குடியிருப்புகளை ஒட்டி எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் சாலையோரமே பாலத்திற்கு அடியில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாப்பாரப்பட்டியில் ஒரு கொலையும், நேற்று குண்டல்பட்டியில் ஒரு கொலையும் நடைபெற்றுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் மர்மமான முறையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று மேலும் ஒருவர் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Russia Vs Trump: ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா
ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா
வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
Russia Accepts Taliban: தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Embed widget