மேலும் அறிய

35 துண்டுகளாக காதலியை வெட்டிய கொடூரம்: ஷ்ரத்தா தன் பெற்றோரிடம் கடைசியாக புலம்பியது என்ன?

தாயிடம் அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாக ஷ்ரத்தா தெரிவித்துள்ளார். ஆனால் சில நாள்களில் அஃப்தாப் மன்னிப்பு கோரியதும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

டெல்லியில் காதலனால் கொல்லப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா, மரணிப்பதற்கு முன்னால் தன்னை தன் காதலன் அஃப்தாப் அடித்து துன்புறுத்தி வந்ததாக ஏற்கெனவே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

35 துண்டுகளாக வெட்டி காதலன் அப்தாப்பால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஷ்ரத்தா, ஏற்கெனவே  அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு தன் வீட்டிலிருந்து வெளியேறி அஃப்தாப் உடன் லிவ் இன் உறவில் இருந்து வந்த ஷ்ரத்தா, முன்னதாக தன் தாயைக் காண அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ஆனால் சில நாள்களில் அஃப்தாப் மன்னிப்பு கோரியதும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

மும்பையில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கால் சென்டரில் பணிபுரிந்து வந்த ஷ்ரத்தா அஃப்தாப்பை சந்தித்து, டேட் செய்யத் தொடங்கினார். இவர்களது உறவுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காத நிலையில், அங்கிருந்து இருவரும் டெல்லி சென்று, மெஹ்ராலியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசிக்கத் தொடங்கினர்.

தொடர்ந்து அஃப்தாப்பிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஷ்ரத்தா வற்புறுத்தத் தொடங்கிய நிலையில், இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில்,  மே 18ஆம் தேதி ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்த அப்தாப், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, 300 லிட்டர் குளிர்சாதன பெட்டி ஒன்றை வாங்கி அவரது உடல் பாகங்களை பதப்படுத்தி வந்துள்ளார்.

மேலும் 18 நாள்கள் தினம் நள்ளிரவு 2 மணியளவில் வெளியே சென்று தனது காதலி ஷ்ரத்தாவின் உடல் துண்டுகளை டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் வீசியெறிந்து வந்துள்ளார். இவ்வழக்கை ஷ்ரத்தாவின் தந்தை விகாஷ் மதன் வாக்கர் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வந்த காவல் துறையினர், நேற்று (நவ.14) அஃப்தாப்பை கைது செய்தனர்.

இந்நிலையில் ஷ்ரத்தாவின் தோழி தன்னிடம் ஷ்ரத்தாவை கடந்த சில மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்ததை அடுத்து, தான் சந்தேகமடைந்து புகார் அளித்ததாக விகாஷ் மதன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷ்ரத்தாவின் தாய் உயிரிழந்த நிலையில், அஃப்தாப் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தன்னிடமும் ஷ்ரத்தா தெரிவித்ததாக விகாஷ் மதன் தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்துப் பேசிய ஷ்ரத்தாவின் தோழி லஷ்மி, தான் ஜூலை மாதம் முதலே ஷ்ரத்தா பற்றி நண்பர்களிடம் தொடர்ந்து விசாரித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்து அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு இது பற்றி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி காடுகளில் உடல் துண்டுகளை காதலன் வீசியெறிந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget