மேலும் அறிய

CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள டிக்கெட் கவுன்டரில் பல மணி நேரம் கிடந்த சடலத்தை அப்புறப்படுத்தாமல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சடலத்தை அகற்றுவதில் ரயில்வே போலீசாரின் அலட்சிய போக்கு  காரணமா
 
செங்கல்பட்டு : சென்னையில் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பிற மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள்  தங்கி பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று சென்னையின் புறநகர் மாவட்டமாக இருப்பதால் செங்கல்பட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

 டிக்கெட் கவுண்டர் வாசலில் பிணம்

பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தை நம்பி இருக்கும் நிலையில், அவர்களுக்கு   ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதேபோன்று தென் மாவட்டத்தை நோக்கிச் செல்லக்கூடிய ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. 

இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில் சடலம் இருந்தது. முதல் இரண்டு கவுண்டர்களில் பொதுமக்கள் டிக்கெட் பெற்று சென்ற நிலையில் முன்பதிவு மையத்தில் சடலம் இருந்தது.


CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?

ரயில்வே போலீசார் அலட்சியமா?

 
காலை 6 மணி முதல் சுமார் 11 மணி வரை மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் அடையாளம் தெரியாத நபர் சடலமாக இருந்த நிலையில் இது பற்றிய செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது இச்சம்பவம் தகவல் அறிந்தும் போலீசார் அலட்சியப் போக்குடன் இருந்தனர். செங்கல்பட்டு நகர போலீசார் ரயில்வே இடத்தில் உள்ளதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாத என ஒதுங்கிக் கொண்ட நிலையில், சடலத்தின் அருகிலேயே சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த  ரயில்வே போலீசார் சுமார் 11 மணி அளவில் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?
 
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருந்தது ரயில்வே போலீசாரின் அலட்சிய போக்கு ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் ?

 இரண்டு காவல் நிலைய எல்லைகள் சந்திக்கும் இடத்தில் நடைபெறும்,  குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு எடுப்பதில் காவல் நிலையத்திற்கு இடையே அவ்வப்பொழுது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போன்று ரயில்வே போலீசார் மற்றும்  தமிழ்நாடு போலீசார்  ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.  

செங்கல்பட்டு பொருத்தவரை செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ஆகிய இருவருக்கும் அவப்பொழுது இந்த எல்லை பிரச்சினை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இதற்கு நிரந்தர தீர்வு காணும் பட்சத்தில்,  குற்ற சம்பவங்களை குறைப்பது மட்டுமில்லாமல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யவும் உறுதுணையாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை: ஒரே நாளில் 7 பேரிடம் ரூ.2.85 லட்சம் சுருட்டிய மர்ம கும்பல்!
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
C. Vijayabasker : 'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
'திமுகவில் இணைகிறார் அதிமுக C. விஜயபாஸ்கர்?’ விரைவில் அறிவிப்பு..!
Embed widget