மேலும் அறிய

CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள டிக்கெட் கவுன்டரில் பல மணி நேரம் கிடந்த சடலத்தை அப்புறப்படுத்தாமல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சடலத்தை அகற்றுவதில் ரயில்வே போலீசாரின் அலட்சிய போக்கு  காரணமா
 
செங்கல்பட்டு : சென்னையில் புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு மாவட்டம் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நிறைந்த மாவட்டமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பிற மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சேர்ந்தவர்கள்  தங்கி பணியாற்றி வருகின்றனர். அதேபோன்று சென்னையின் புறநகர் மாவட்டமாக இருப்பதால் செங்கல்பட்டில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

 டிக்கெட் கவுண்டர் வாசலில் பிணம்

பெரும்பாலானோர் பொதுப்போக்குவரத்தை நம்பி இருக்கும் நிலையில், அவர்களுக்கு   ரயில் போக்குவரத்து மிக முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதேபோன்று தென் மாவட்டத்தை நோக்கிச் செல்லக்கூடிய ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய செங்கல்பட்டு ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. 

இந்த நிலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்த நிலையில் சடலம் இருந்தது. முதல் இரண்டு கவுண்டர்களில் பொதுமக்கள் டிக்கெட் பெற்று சென்ற நிலையில் முன்பதிவு மையத்தில் சடலம் இருந்தது.


CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?

ரயில்வே போலீசார் அலட்சியமா?

 
காலை 6 மணி முதல் சுமார் 11 மணி வரை மக்கள் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் அடையாளம் தெரியாத நபர் சடலமாக இருந்த நிலையில் இது பற்றிய செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது இச்சம்பவம் தகவல் அறிந்தும் போலீசார் அலட்சியப் போக்குடன் இருந்தனர். செங்கல்பட்டு நகர போலீசார் ரயில்வே இடத்தில் உள்ளதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாத என ஒதுங்கிக் கொண்ட நிலையில், சடலத்தின் அருகிலேயே சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த  ரயில்வே போலீசார் சுமார் 11 மணி அளவில் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

CRIME: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மணிக்கணக்கில் கிடந்த சடலம்! ரயில்வே போலீசார் அலட்சியமா?
 
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடத்தில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அடையாளம் தெரியாத நபரின் சடலம் இருந்தது ரயில்வே போலீசாரின் அலட்சிய போக்கு ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் ?

 இரண்டு காவல் நிலைய எல்லைகள் சந்திக்கும் இடத்தில் நடைபெறும்,  குற்ற சம்பவங்கள் தொடர்பாக வழக்கு எடுப்பதில் காவல் நிலையத்திற்கு இடையே அவ்வப்பொழுது பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதே போன்று ரயில்வே போலீசார் மற்றும்  தமிழ்நாடு போலீசார்  ஆகிய இடங்களிலும் இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.  

செங்கல்பட்டு பொருத்தவரை செங்கல்பட்டு நகர போலீசார் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ஆகிய இருவருக்கும் அவப்பொழுது இந்த எல்லை பிரச்சினை ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இதற்கு நிரந்தர தீர்வு காணும் பட்சத்தில்,  குற்ற சம்பவங்களை குறைப்பது மட்டுமில்லாமல் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யவும் உறுதுணையாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget