மேலும் அறிய

Crime : ‘இன்னொருத்திய கல்யாணம் பண்ணுவியா?’ மிரட்டிய காதலி...இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...என்ன நடந்தது?

உத்தர பிரதேச மாநிலத்தில் காதலி மிரட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : உத்தர பிரதேச மாநிலத்தில் காதலி மிரட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் காவல்நிலையத்திற்குட்பட்ட பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார் (24). இவர் கடந்த சனிக்கிழமை காலை வேலைக்காக வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர், மோகன்லால்கஞ்ச் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்று, மரத்தில் தூக்குப்போட்டு உள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் போலீசார் திலீப் குமாரின் செல்போனையும், ஒரு கடிதத்தையும் கைப்பற்றினர்.  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் கூறுகையில், ” தற்கொலை செய்துகொண்டது பர்வார் பஸ்சிம் பகுதியைச் சேர்ந்த  திலீப் குமார் என்பது தெரியவந்தது. மேலும், அவருக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் முடிந்தது. பிப்ரவரி 20ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருன்றனர்.

மேலும், சம்பவத்தன்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, "நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். ஆனால் அந்த பெண் வீட்டிலும் என் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்துவிட்டது. அதனால் எனது காதலி தன்னை திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார். ஆனால் நான் அதற்கு மறுத்துவிட்டேன். இதனால், அந்த பெண் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், நீ என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்நிலையத்தில் பொய் புகார் அளிப்பேன் என்று மிரட்டினார். எனக்கு வேறு வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தேன் " என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக திலீப் குமாரின் காதலியான மோனா என்ற பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)


மேலும் படிக்க

Crime: பாலியல் அத்துமீறல்... இளைஞரை மிகத்திறமையாக போலீசிடம் சிக்க வைத்த சிறுமி .. நடந்தது என்ன? 

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
Embed widget