மேலும் அறிய

crime: வேலூரில் வாலிபரிடம் 15 சவரன் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது

வேலூரில் வங்கியில் அடகு வைக்க எடுத்துச் சென்ற நகையை திரும்ப வீட்டுக்கு கொண்டு வந்த போது வாலிபரிடம் 15 சவரன் நகையை பறித்துக் கொண்டு ஓடிய போது விபத்தில் சிக்கிய பைக் ஆசாமி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் தொரப்பாடியைச் சேர்ந்த லோகேஷ் வயது (30) இவர் கடந்த 7-ஆம் தேதி மாலை வேலப்பாடியில் உள்ள வங்கியில் 15 சவரன் நகைகளை அடமானம் வைக்க கொண்டு வந்தார். அப்போது வங்கியில் நகைக்கு குறைந்த தொகை கொடுப்பதாக வங்கியில் கூறியதால் நகைகளுடன் வெளியே வந்த லோக்கேஷ் அவருடைய இரு சக்கர வாகனத்தில்  நகை பையை மாட்டிவிட்டு இது குறித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் . அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரண்டு மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனத்தில் இருந்த நகை பையை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் வேகத்தில் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். அப்போது வேலூர் எஸ்பி பங்களா எதிரே சென்றபோது முன்னாள் சென்ற சரக்கு ஆட்டோ மீது நகை பறித்து ஆசாமிகள் இருசக்கரம் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஹெல்மெட் கழட்டி வீசிவிட்டு நகையுடன் தப்பி ஓடினர்.

 


crime: வேலூரில் வாலிபரிடம் 15 சவரன் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது

பட்ட பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் ஈடுபட்டதும் திருட்டு இரு சக்கரம் வாகனம் கொண்டு ஒரு காரின் பதிவு எண்ணை மாட்டிக் கொண்டு வந்து நகை பறிப்பில்  ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இருசக்கர ஆசாமிகளை பிடிக்க 3 தனிப்படை காவல்துறையினர் சேலம் ,திருச்சி, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையை வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஷ்யாமளா தலைமையிலான காவல்துறையினர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்.

 


crime: வேலூரில் வாலிபரிடம் 15 சவரன் நகை பறித்த வழக்கில் 3 பேர் கைது

 

அதில் அவர்கள் 3 நபர்களும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வேலைப்பாடியில் நடந்த நகை பறிப்பு வழக்கில் அவர்களுக்கு தொடர்புடையது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் வயது (37), சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் வயது (24 ), திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் வயது (23), என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட  3 பேரும் சேர்ந்து திட்டமிட்டு லோகேஷ் நகைப்பையை திருடியதும், வங்கியின் உள்ளே இருந்து லோகேஷின் நடவடிக்கைகள் குறித்து செந்தில்குமார் வெளியே இருந்த ஈஸ்வரன், ராஜசேகரிடம் செல்போனில் கூறியதும், அவர்கள் 2 பேரும் நகைப்பையை திருடி இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றதும், 3 பேர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட நகை, பணம் பறிப்பு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 பவுன் நகையை செந்தில்குமார் மனைவியிடம் கொடுத்ததாகவும், அவர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget