மேலும் அறிய

Crime: திருச்சியில் இரும்பு லாக்கரில் வைத்த 107 பவுன் நகை கொள்ளை

திருச்சி பாலக்கரை பகுதியில் பரபரப்பு இரும்பு லாக்கரில் வைத்த 107 பவுன் நகை மாயமானது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை.

திருச்சி மாநகரில் கடந்த சில மாதங்களாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மாநகர ஆணையர் உத்தரவின்படி, மாநகர் முழுவதும் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். இந்நிலையில் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64) தொழிலதிபரான இவர், தனது வீட்டின் அறையில் இரும்பு லாக்கரில் 107 பவுன் நகையை கடந்த மாதத்துக்கு முன்பு வைத்து பூட்டி உள்ளார். பின்னர் இரு தினங்களுக்கு முன்பு அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த லாக்கர் பழங்கால லாக்கர் ஆகும். இதனை முழுமையாக திறக்க வேண்டும் என்றால் 12 சாவிகளை பயன்படுத்த வேண்டும். இந்த நிலையில் லாக்கர் எப்படி திறக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வீட்டில் தொழிலதிபரின் மனைவி, மகன், மருமகன் உள்ளிட்டோர் உள்ளனர். வீட்டிலிருந்து யாரும் வெளியூரும் செல்லவில்லை. அதே போன்று வீட்டின் பூட்டு எதுவும் உடைக்கப்படவில்லை. லாக்கரை இரும்பு ராடால் கூட உடைக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மேகநாதன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


Crime: திருச்சியில்  இரும்பு லாக்கரில் வைத்த 107 பவுன் நகை கொள்ளை

இதனை தொடர்ந்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 107 பவுன் நகை மாயமானது எப்படி? யார் திருடியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55) இவர்உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டின் அருகில் வெளி பகுதியில் வீட்டு தெய்வதற்கு சிறிய அளவில் மேடை அமைத்து இருந்த பூஜை அறையில் இருந்த பூஜை பொருட்கள் திருட்டுப் போய் இருப்பத்தை கண்டு ரவிசந்திரன்அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. அதேசமயம் தொடர் குற்றசெயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget