மேலும் அறிய

Crime : ஆன்லைனில் 15 இலட்ச ரூபாயை இழந்த நபர் ; அதிரடியாக பணத்தை மீட்டு தந்த காவல் துறையினர்

பங்கு வர்த்தகத்தில் சுமார் 15 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும், அவரது முதலீட்டிற்கு 61 இலட்ச ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாக போலியான பங்கு வர்த்தக கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதியன்று மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையம் பகுதியை சேர்ந்த ஞானமணி என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில் இரண்டு வருடங்கள் முன்பு கொரோனா நோய் தொற்று காலத்தில் பணம் ஈட்டுவதற்கு பங்கு வர்த்தகத்தில் தவறான நிறுவன வழிகாட்டுதலின் பேரில், சுமார் 15 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ததாகவும், அவரது முதலீட்டிற்கு 61 இலட்ச ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளதாக போலியான பங்கு வர்த்தக கணக்கில் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த தொகையை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற இயலவில்லை எனவும், இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, இழந்த பணத்தை மீட்க வேண்டி ஞானமணி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்புடைய மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு, அதிலிருந்து ஞானமணி இழந்த மொத்தத் தொகையும் காவல் துறையினர் மீட்டனர். பின்னர் ஞானமணி இழந்த 15 இலட்ச ரூபாயை பணத்தை அவரிடம் சைபர் கிரைம் காவல் துறையினர் ஒப்படைத்தனர். 

இது தொடர்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும் தெரிவித்தார். சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்த்த வினோத் (எ) ஆண்டி பண்டாரம் (38) கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வினோத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு கோவை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று  வினோத்க்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு சேர்த்து 22 வருட கடுங்காவல் தண்டனையும் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற பெண்காவலர் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Puducherry Power Shutdown: மக்களை உஷார்! புதுச்சேரியில் இன்றும் நாளையும் மின் தடை
Embed widget