மேலும் அறிய

100 கோடியை தொலைத்த வங்கி.. சிக்கலில் சென்னை துறைமுக கழகம்

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம்: வங்கியின் கவனக் குறைபாடு காரணமாகத்தான் இந்த மோசடி நடைபெற்றது. எனவே, தாங்கள் முதலீடு செய்த ரூ. 100 கோடியை இந்தியன் வங்கி உடனடியாக திருப்பித் தர வேண்டும்.

தாங்கள் முதலிடு செய்த 100.67 கோடி ரூபாயை இந்தியன் வங்கி உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என்று சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.   

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் 100 கோடி ரூபாயை சென்னையில் உள்ள இந்தியன் வங்கி கோயம்பேடு கிளையில் முதலீடு செய்தது. கடந்தாண்டு மாா்ச் மாதம், கோயம்பேடு வங்கி கிளைக்கு வருகை புரிந்த மோசடி நபர் ஒருவர், தன்னை சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் நிதிப் பிரிவு துணை இயக்குநா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது அடையாளத்தை நிறுவுவதற்கான, போலி ஆவணங்களையும் வங்கியுடம் காட்டியுள்ளார்.   

  Africa | நோயாளிகள்போல் நடித்து 70 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்திய கும்பல் கைது

மேலும், துறைமுகம் முதலீடு செய்துள்ள ரூ.100 கோடியில், ரூ.45 கோடியை நடப்புக் கணக்குக்கு மாற்ற வேண்டும் என்றும், ரூ.50 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக (Fixed Deposits) வைக்க வேண்டும் என வங்கியிடம் கேட்டிருக்கிறார்.

இதனையடுத்து, புதிதாக நடப்பு கணக்கு தொடங்கப்பட்டு  ரூ.45 கோடியை உடனடியாக வங்கி அதிகாரிகள் மாற்றினர். ரூ.50 கோடியை நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்தனர். நடப்புக் கணக்கில் மாற்றப்பட்ட ரூ. 45 அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, துறைமுகப் பொறுப்புக் கழகம் இந்தியன் வங்கியிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர்.  பின்னர் தான், பெரும் தொகை மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.                    

இந்த மோசடி தொடர்பாக, வங்கியின் துணை மேலாளர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 

  ’லலிதா ஜீவல்லரி’ திருட்டு பாணியில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை சென்னை  உயர்நீதிமன்றத்தை அணுகிய துறைமுகப் பொறுப்புக்கழகம், " தாங்கள் முதலீடு செய்த ரூ. 100 கோடியை இந்தியன் வங்கி உடனடியாக திருப்பித் தர வேண்டும். வங்கியின் கவனக் குறைபாடு காரணமாகத்தான் இந்த மோசடி நடைபெற்றது. 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது  பணத் தொகையைத் திருப்பி செலுத்துவதற்கும், விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று தெரிவித்தது.         

சொன்னது வெஜிடபுள்... இருந்ததோ கர்நாடகா ‛புல்’ ; லாரியோடு சிக்கிய மது ஏஜெண்டுகள்! 

வங்கியின் தரப்பில் - மோசடியில் பங்களிப்பு / அலட்சியம் / செயல்பாட்டில் குறைபாடு (பரிவர்த்தனை வாடிக்கையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல்) போன்ற நிகழ்வுகளில் வாடிக்கையாளர் பொறுப்பாகமாட்டார் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதே சமயம், வாடிக்கையாளரின் அலட்சியத்தால் இழப்பு ஏற்பட்டால், அதாவது பரிவர்த்தனை சார்ந்த சான்றுகளை யாரிடமாவது பகிர்ந்து கொண்டிருந்தால், மோசடி பரிவர்த்தனைகளை வங்கியிடம் தெரிவிக்காத வரையில் வாடிக்கையாளர் முழுமையான இழப்பிற்கு பொறுப்பாகிறார்.    

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai | வேட்புமனு தாக்கல் விவகாரம்’’அ.மலையின் ப்ளான் இதுதான்’’ செல்வப்பெருந்தகை விளாசல்Durai Vaiko Trichy DMK | ”வேலை பார்க்க மாட்டோம்” துரை வைகோவுக்கு போர்க்கொடி! திருச்சி திமுக பூகம்பம்Kanimozhi Pressmeet | ’’கனவு காண்பது அவர் உரிமை’’அ.மலையை கலாய்த்த கனிமொழி..60% வாக்குகள்Sowmiya anbumani speech | ”நான் உங்க வீட்டு பொண்ணு” பிரச்சாரத்தில் கலக்கும் சௌமியா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Embed widget