மேலும் அறிய

பெற்றோர்களே எச்சரிக்கை.. இந்த தவறை செய்யாதீங்க.. உயிரிழந்த 4 வயது குழந்தை.. என்னாச்சு?

Tambaram News : சென்னை தாம்பரத்தில் தாயின் தூக்க மாத்திரை சாப்பிட்ட 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் மாத்திரை சாப்பிட்ட 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை வளர்ப்பு என்பது மிக கடினமான ஒன்றாகவே உள்ளது. நாம் தெரியாமல் செய்யும் சிறு தவறு கூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும், அவர்களுக்கு தெரியாமல் செய்யும் சிறு தவறு குழந்தைகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, தாய் செய்த சிறிய தவறால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.‌ இந்தநிலையில் குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 




மகன் இறந்ததால் மன உளைச்சல்


சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் சந்தோஷபுரத்தில் தனது தாய் சுதாவுடன் வசித்து வருபவர் அஸ்வினி (31). இவர் சிறுசேரியில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  இவரது கணவர் கணவர் குஜராத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில் இவர்களது மூத்த மகன் ஹிரிதிவ் (7) உடல் நிலை சரியில்லாமல் கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்துள்ளார். இதனால் அஸ்வினி மிகுந்த மன உளைச்சலில் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவர்கள் பரிந்துரையில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளார். 

குழந்தை வாயில் நுரை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்கு முன்பு படுக்கையின் பக்கத்தில் மாத்திரைகளை வைத்து விட்டு அஸ்வினி கழிவறை சென்று விட்டு வந்ததாகவும், அப்போது எல்கேஜி படிக்கும் மகள் ஹார்த்ரா (4), தூக்க மாத்திரையை தவறுதலாக எடுத்து சாப்பிட்டதாகவும் பின்னர் இருவரும் தூங்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் நேற்று காலை 4 மணியளவில் அஸ்வினி எழுந்து பார்த்த போது குழந்தை வாயில் நுரை தள்ளி இருந்துள்ளது.

தாய் தற்கொலை முயற்சி

மகள் இறந்து விட்ட சோகத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கணவருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அஸ்வினி கழிவறைக்கு சென்று, பிளேடால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

வழக்கம்போல காலை குழந்தையை பள்ளிக்கு அனுப்ப தயார் செய்ய பாட்டி சுதா வந்த போது கழிவறையில் ரத்த வெள்ளத்தில் அஸ்வினியும், குழந்தை துரை தள்ளியும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

போலீசார் வழக்கு பதிவு


பின்னர் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சென்ற சேலையூர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதால் போலீசார் சந்தேகத்தின் மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உஷாராக இருங்கள் மக்களே..

குழந்தைகள் எப்பொழுதும் சுட்டித்தனமாகவே இருப்பார்கள். புதியதாக எந்த பொருளைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஆர்வம் வந்துவிடும். அந்த பொருளை பரிசோதித்துப் பார்ப்பதற்கும், வாயில் எடுத்து வைத்துக் கொள்வது, குழந்தைகளின் இயல்பு. சார்ஜர் ஒயர்களை குழந்தைகள் கடிப்பதும் இதன் காரணமாகத்தான். எனவே குழந்தை வளர்ப்பவர்கள் குழந்தைக்கு எட்டும் வகையில் எந்த ஆபத்தான பொருட்களையும் வைக்கக்கூடாது. குறிப்பாக மாத்திரை போன்ற பொருட்கள் குழந்தை கண்ணில் பார்க்கக்கூடாது, இன்றைய காலத்தில் மாத்திரையும் மிட்டாய் போன்று இருப்பதால், குழந்தைகளுக்கு அதன் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு, எனவே பெற்றோர் இதுபோன்ற விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“I AM WAITING”  திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
“I AM WAITING” திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govt Bus Damage : படிக்கட்டு உடைந்த பஸ்” உயிரோடு விளையாடலாமா” ஆத்திரத்தில் பயணிகள்Thirumavalavan Meet Buddhist : தேம்பி அழுத புத்த பிட்சு..கண்ணீரை துடைத்த திருமா”தைரியமா இருங்க ஐயா”Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“I AM WAITING”  திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
“I AM WAITING” திருச்சி எஸ்.பி. வருண்குமார் வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் – என்ன சம்பவம்..?
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
Group 4 vacancies: “ஆட்சிக்கு வருவதற்காக சொன்ன அத்தனையும் பொய்யா?” குரூப் 4 தேர்வர்களுக்காக களமிறங்கிய எடப்பாடி பழனிசாமி..!
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
IND Vs Ban Test: இந்தியா - வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் - சென்னையில் மழை குறுக்கே வருமா?
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Chandrababu Tirupati: பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு - முதலமைச்சர் சந்திரபாபு
Breaking News LIVE 19 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
Breaking News LIVE 19 Sep: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது
Parotta Prasadham : தென்காசி பக்தர்களுக்கு பரோட்டா பிரசாதம், சன்னா மசாலா.. ஆஹா இது எப்டிருக்கு
தென்காசி பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்பட்ட பரோட்டோ, சன்னா மசாலா.. ஆஹா இது எப்டிருக்கு
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Walkie Talkies Blast: நேற்று பேஜர், இன்று அடுத்தடுத்து வெடித்த வாக்கி-டாக்கீஸ், 14 பேர் பலி, 300 பேர் காயம் - பதற்றத்தில் லெபனான்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Embed widget