மேலும் அறிய

Crime: சிறுநீர் கழித்த பிரச்னையால் கொடூரமாக எரிக்கப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் - காவலரின் கள்ளக்காதலி கைது..!

சென்னையில் காணாமல் போனவரின் உடல் செங்கல்பட்டில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கே.கே நகர் விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 26). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ பகுதியில் கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1ஆம் தேதி ரவி தனியாக வீட்டிலிருந்த போது மூன்று பேர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வருவதாக கூறி, ரவியை விசாரணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா இந்த தகவலறிந்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது, அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
கிடைக்காத கணவர்
 
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா தனது கணவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த 4ஆம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது தனது வீட்டின் அருகே செம்பியம் காவல் நிலைய காவலராக பணிபுரிந்து வந்த  செந்தில்குமார் என்பவர் அவரது காதலியுடன் வசித்து வந்ததாகவும், செந்தில்குமாருடன் இணைந்து தனது கணவர் ரவி தினமும் மது அருந்தி வந்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். 

Crime: சிறுநீர் கழித்த பிரச்னையால் கொடூரமாக எரிக்கப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் -  காவலரின் கள்ளக்காதலி கைது..!
 
இந்நிலையில் தங்களது குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால், செந்தில்குமாரின் குடும்பத்தோடு தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது தனது கணவர் ரவியை செந்தில்குமார் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் காணாமல்போன அந்த நாளே செந்தில்குமார் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு சென்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், தனது கணவரை செந்தில்குமார் கடத்தி சென்றிருப்பதாக சந்தேகிப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
 
செல்போன் எண் 
 
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, காவலர் செந்தில்குமார் வீட்டில் விசேஷம் எனக்கூறி கடந்த 28ஆம் தேதி முதல் பணிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த கே.கே நகர் போலீசார் தனிப்படை அமைத்து காணாமல் போன இருவரது செல்போன் எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தியதில், ஈக்காட்டுதாங்கல், ராமாபுரம் என காண்பித்து பின்னர் செல்போன் எண் ஸ்விட்ச் ஆகியிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் செங்கல்பட்டு அருகே எரிந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக படாளம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் போலீசார் அந்த சடலத்தை மீட்டுள்ளனர். காணாமல் போன ரவியின் உடலா என முழுமையாக உறுதிசெய்து அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 
 
கைதான கவிதா
 
இதுகுறித்து கேகே நகர் போலீசார்  கவிதாவை கைது செய்து செங்கல்பட்டு படாளம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கவிதாவிடம் நடத்திய விசாரணையில், உயிரிழந்த ரவியின் குழந்தை ஜெசிகா, செந்தில்குமாரின் வீட்டருகே சிறுநீர் கழித்ததால்,  தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக காவலர் செந்தில்குமார் கடும் கோபத்தில் இருந்தார். அவரை ஒரு தட்டு தட்டுவோம் என கூட்டிச் சென்ற பொழுது உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலை எரிக்க திட்டமிட்டு செங்கல்பட்டு அருகே கொண்டு சென்று, பெட்ரோல் மற்றும் சர்க்கரை உதவியுடன் எரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

Crime: சிறுநீர் கழித்த பிரச்னையால் கொடூரமாக எரிக்கப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் -  காவலரின் கள்ளக்காதலி கைது..!
 
அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும்
 
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது , காவலர் செந்தில்குமாருக்கும், ரவி வீட்டருகே குடியிருந்த, கவிதா என்ற பெண்ணுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கவிதாவிற்கும் ரவி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, இந்த சண்டையின் காரணமாகவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். மேலும் இறந்து போனவரின் உடல் ரவியின் உடல் தானா என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க, டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Crime: சிறுநீர் கழித்த பிரச்னையால் கொடூரமாக எரிக்கப்பட்ட பக்கத்து வீட்டுக்காரர் -  காவலரின் கள்ளக்காதலி கைது..!
 
இரும்பு கடையில் ஒரு கால்
 
இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட ரவியின், ஒரு கால் பழைய இரும்பு கடையிலும், ஒரு கை புதர் பகுதியிலும் கிடந்துள்ளது. இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பார்த்து காவல் துறையினருக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலையாளிகள் கை, கால்களை வீசி விட்டு சென்றனரா? அல்லது உடல் எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து நாய்கள் எடுத்து சென்றனவா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  சென்னைக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவதுபோல் உணர்கிறேன் - மாளவிகா மோகனன்
ABP Southern Rising Summit 2025 LIVE: சென்னைக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவதுபோல் உணர்கிறேன் - மாளவிகா மோகனன்
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  சென்னைக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவதுபோல் உணர்கிறேன் - மாளவிகா மோகனன்
ABP Southern Rising Summit 2025 LIVE: சென்னைக்கு வருவதை சொந்த வீட்டிற்கு வருவதுபோல் உணர்கிறேன் - மாளவிகா மோகனன்
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Embed widget