மேலும் அறிய

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! சாக்லேட்டில் மறைத்து கடத்தல்! ₹9.5 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

"தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னைக்கு கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.9.5 கோடி மதிப்புடைய, 9.5 கிலோ, ஹைட்ரோபோனிக், உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது"

சாக்லேட்டுகள் வடிவிலும், உணவு பாக்கெட்களிலும் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த, இரண்டு பயணிகளையும், இந்த கஞ்சா பார்சல்களை வாங்கிச் செல்ல வந்திருந்த, வடமாநிலத்தைச் சேர்ந்த, மற்றொருவரையும், மொத்தம் 3 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு, நள்ளிரவில் வரும் விமான பயணிகளை, தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். 

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ், பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தபோது, வடமாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலா பயணி விசாவில், தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், தாய்லாந்தில் இருந்து திரும்பி வரும்போது, சென்னைக்கு வந்தது ஏன்? என்ற சந்தேகத்தில், அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். 

சாக்லேட்டில் இருந்த கஞ்சா

இதை அடுத்து அந்த வட மாநில பயணியை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று, அவருடைய உடமைகளை பரிசோதித்தனர். அப்போது அவருடைய உடமைக்குள், சாக்லேட் பார்சல்கள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட் இருந்தன. அவைகளைக் பிரித்து பார்த்த போது, அவைகளில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 7.5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.7.5 கோடி.

இந்தநிலையில் தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் கண்காணித்த போது, வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு ஆண் பயணி, சுற்றுலா பயணியாக, தாய்லாந்து நாட்டிற்கு போய்விட்டு, அவர் சென்னைக்கு திரும்பி வந்திருந்தார். 

சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், அந்தப் பயணியையும் சந்தேகத்தில் விசாரித்து, அவருடைய உடைமைகளை சோதனை செய்தனர். அவருடைய உடைமைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 2 கிலோ, ஹைட்ரோபோனிக் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 கோடி. இதை அடுத்து அந்தப் பயணியையும், சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். 

கடத்தல் குருவிகள் 

இந்தநிலையில் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கடத்தல் குருவிகள். அவர்களை இந்த கடத்தலுக்கு வேறு சிலர்தான் பயன்படுத்தினர். அவர்கள் கடத்திக் கொண்டு வந்த இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவை வாங்கி செல்வதற்கு, கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிந்தது. 

இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலைய பகுதியில், சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் கஞ்சா போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்றும், அவர்தான் இந்த கஞ்சா பார்சல்களை வாங்கி, ரயில் மூலம் வேறு மாநிலங்களுக்கு எடுத்து செல்ல வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அவரையும் கைது செய்தனர். 

ஹைட்ரோபோனிக் கஞ்சா

இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரிடமும், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களையும் கைது செய்ய, சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 

சென்னை விமான நிலையத்தில், அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் தாய்லாந்து நாட்டிலிருந்து, கடத்திக் கொண்டுவரப்பட்ட, ரூ.9.5 கோடி மதிப்புடைய உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வடமாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் பயணிகள் இரண்டு பேர், இந்த கஞ்சா வை வாங்கிக் கொண்டு செல்ல வந்த மற்றொரு நபர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "நாளொரு நாடகம்.." மு.க.ஸ்டாலினை மக்கள் நம்ப வாய்ப்பே இல்லை - எடப்பாடி பழனிசாமி
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
பொங்கல் ஸ்பெஷல்: கோவை, நெல்லை உட்பட 10 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Embed widget