மேலும் அறிய

’மாட்டிக்கிட்ட பங்கு...’ காட்டிக்கொடுத்த நாய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?

சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.7.6 கோடி மதிப்புடைய, உயர்ரக கஞ்சா போதைப்பொருள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். 

சென்னை விமான நிலையத்தில் சுங்க சோதனையின்போது, மோப்ப நாய் உதவியுடன், போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவாகாரம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையம் 

தாய்லாந்து நாட்டு தலைநகர்‌ பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானத்தில், பெருமளவு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதோடு போதை பொருளை கண்டுபிடிப்பதற்கான, நிபுணத்துவம் வாய்ந்த மோப்ப நாயையும், இந்த சோதனைக்கு பயன்படுத்தினர். 

மோப்பம் பிடித்த மோப்பநாய்

இந்தநிலையில் நேற்று நள்ளிரவு பாங்காக்கில் இருந்து, சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி ஒருவர், தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா பயணியாக போய்விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் கொண்டு வந்த அட்டைப் பெட்டிகளை, மோப்பம் பிடித்த சுங்கத்துறை மோப்பநாய், உடனடியாக அதே இடத்தில் தரையில் அமர்ந்து கொண்டு, கால்களால் தரைய கீறி சைகை காட்டியது. 

தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை தனியே அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி, அட்டைப்பெட்டிக்குள் சாக்லேட் மற்றும் இனிப்புகள் அதோடு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இருப்பதால், அந்த வாசனைக்கு நாய் இதை போல் செய்கிறது என்று கூறினர். ஆனாலும் சுங்க அதிகாரிகள் அதை நம்பாமல், அட்டைப்பெட்டிகளை திறந்து பார்த்து சோதனை செய்தனர். 

உயர் ரக கஞ்சா போதை பொருள் பறிமுதல் 

அந்த அட்டைப் பெட்டிகளில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அட்டைப் பெட்டிகளில் 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 7.6 கோடி. இதை அடுத்து போதைப் பொருள் கடத்தல் பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுங்கத்துறை விசாரணையில் இந்தப் பயணி, போதை கடத்தல் பொருள் குருவி என்றும், இவரை இந்த கடத்தலுக்கு அனுப்பியது, முக்கியமான போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் என்றும் தெரிய வந்தது. எனவே அந்த முக்கிய போதை கடத்தல் கும்பல் நபர் யார்? என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி, அந்த போதை கடத்தல் கும்பலை சேர்ந்த நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் ரூ.7.6 கோடி மதிப்புடைய, 7.6 கிலோ உயர் ரக கஞ்சா போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
Volvo EX30: ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
Embed widget