மேலும் அறிய

“குடிச்சிட்டு ஆட்டம் போடுவேன், உனக்கு என்ன...?” - அண்ணனை போட்டு தள்ளிய கொடூரத் தம்பி

Chengalpattu News: மது போதையில் தகராறு செய்த தம்பியை தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்த தம்பி.

செங்கல்பட்டு அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து படாளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதைக்கு அடிமையான தம்பி

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த குமாரவாடி கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு செல்வம் (40) மற்றும் நாகராஜ் (33) என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். மது போதைக்கு அடிமையான நாகராஜ் தினமும் இரவு வீட்டுக்கு வரும்போது போதையில் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

மதுவுக்கு அடிமையான நாகராஜ் அவ்வப்போது செல்வத்திடம் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக செல்வம் மற்றும் நாகராஜ் ஆகிய இருவருக்கிடையே அடிக்கடி தகராறுகளும் ஏற்பட்டு வந்துள்ளது.

மது போதையில் தகராறு

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு வராத நாகராஜ் அதிக மது போதையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் செல்வத்திற்கும் நாகராஜருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அவரது தந்தை நீலகண்டன் தடுக்க சென்றதால் போதையில் ஆத்திரமடைந்த நாகராஜ் தந்தையை தாக்க முயன்ற நிலையில் நாகராஜ் செல்வத்தை அருகில் இருந்த கத்தியை எடுத்து மார்பு பகுதியில் சரமாரியாக தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த செல்வம் குடும்பத்தினர் உதவியுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்‌. தகவல் அறிந்து வந்த படாளம் போலீசார் நாகராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை சொல்வது என்ன ?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது: மது போதையில் நாகராஜ் தொடர்ந்து எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிற்கும் பணம் கொடுக்காமல் தொடர்ந்து வீட்டினரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இருப்பவர்கள் நாகராஜன் தட்டி கேட்டாலும் அவர்களை தாக்குவது அவர்களிடம் சண்டை போடுவது என தொடர்ந்து, பிரச்சனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. 

சம்பவம் நடைபெற்ற நாள் அன்று குடித்துவிட்டு வந்த தம்பியை தட்டி கேட்ட அண்ணனை கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளோம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
Embed widget