மேலும் அறிய

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்

மறைமலை நகர் பகுதியில் செல்போன் திருடர்களை லாவகமாக மாற்றிவிட்ட இளைஞர்.

பொதுமக்கள் தொடர் புகார் 
 
சென்னை புறநகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக மறைமலைநகர், வண்டலூர், தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, காவல்துறையின் மூலம் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
 
காவல்துறை விசாரணை
 
மறைமலைநகர் மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் பலர், தங்கி வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில், நந்திவரம் -  கூடுவாஞ்சேரி அருகே தனியார் குடியிருப்பில், வசித்து வருபவர் பிரபுதேவா இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பிரபுதேவா தான் தங்கியிருந்த வீட்டில், வழக்கம்போல் தனது இரவு தூங்க சென்றுள்ளார் .  இந்நிலையில் இரவு திடீரென , எழுந்து பார்த்த பொழுது , தனது கைபேசி மற்றும் மொபைல் டேப் காணாமல் இருப்பதைக் கண்டு உள்ளார். 
 

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
 
இதனையடுத்து, உடனடியாக தனது நண்பர்களுடன் மறைமலை நகர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக "மொபைல் லொகேஷன்"  மூலம் தொலைந்த செல்போன்களை தேட முயற்சி செய்துள்ளார். அப்போது, பிரபுதேவா, தனது மொபைலில் "ஃபைண்ட் மை டிவைஸ்" என்கிற ஆப்ஷன் இருப்பதாகவும்,  இதில் செல்போன் திருடியவர்களின் லொகேஷன் துல்லியமாக காட்டும் எனவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அதன் மூலம் லொகேஷனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உடனே லொகேஷனுக்கு புறப்பட்டுச் சென்ற பிரபுதேவா மற்றும் காவலர்கள், மறைமலைநகர் போர்ட் அருகே ஃபோர்டு அருகே வீட்டின் மாடியில் தங்கி இருந்த மூன்று பேர்களை பிடித்தனர். அவர்களிடம்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணான பதில்களை சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் அளித்துள்ளனர். 
 

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
 
கைது செய்த காவல்துறையினர்
 
இதனை அடுத்து 3 இளைஞர்கள் தங்கி இருந்த அறையை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், 10 செல்போன்கள் லேப்டாக்கள் மற்றும் டேப்லெட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சார்பட்டா என்கிற சபரி வயது (20), முத்துக்குமார் (18) , விக்கி (21) ஆகிய மூன்று பேர் என தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த மறைமலைநகர் போலீசார் அவர்களிடம் இருந்து, 10 செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு, குற்றவாளி பிடிக்க உதவிய இளைஞருக்கு காவல்துறையினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்
 
 

தலைப்பு செய்திகள்

"அரசாங்கமாவது, விதியாவது!" - தனியார் பள்ளி முதல்வர் ஆவேச பேச்சு; சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த RTE கட்டணக் கொள்ளை!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
பாம்பு, பூரான் பயம்... கையில் தீப்பந்தம்! சீர்காழியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் வீதிக்கு வந்த மக்கள்!
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Embed widget