மேலும் அறிய

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்

மறைமலை நகர் பகுதியில் செல்போன் திருடர்களை லாவகமாக மாற்றிவிட்ட இளைஞர்.

பொதுமக்கள் தொடர் புகார் 
 
சென்னை புறநகர் பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகிறது. குறிப்பாக மறைமலைநகர், வண்டலூர், தாம்பரம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, காவல்துறையின் மூலம் குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
 
காவல்துறை விசாரணை
 
மறைமலைநகர் மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் இளைஞர்கள் பலர், தங்கி வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில், நந்திவரம் -  கூடுவாஞ்சேரி அருகே தனியார் குடியிருப்பில், வசித்து வருபவர் பிரபுதேவா இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பிரபுதேவா தான் தங்கியிருந்த வீட்டில், வழக்கம்போல் தனது இரவு தூங்க சென்றுள்ளார் .  இந்நிலையில் இரவு திடீரென , எழுந்து பார்த்த பொழுது , தனது கைபேசி மற்றும் மொபைல் டேப் காணாமல் இருப்பதைக் கண்டு உள்ளார். 
 

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
 
இதனையடுத்து, உடனடியாக தனது நண்பர்களுடன் மறைமலை நகர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உடனடியாக "மொபைல் லொகேஷன்"  மூலம் தொலைந்த செல்போன்களை தேட முயற்சி செய்துள்ளார். அப்போது, பிரபுதேவா, தனது மொபைலில் "ஃபைண்ட் மை டிவைஸ்" என்கிற ஆப்ஷன் இருப்பதாகவும்,  இதில் செல்போன் திருடியவர்களின் லொகேஷன் துல்லியமாக காட்டும் எனவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார். அதன் மூலம் லொகேஷனை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உடனே லொகேஷனுக்கு புறப்பட்டுச் சென்ற பிரபுதேவா மற்றும் காவலர்கள், மறைமலைநகர் போர்ட் அருகே ஃபோர்டு அருகே வீட்டின் மாடியில் தங்கி இருந்த மூன்று பேர்களை பிடித்தனர். அவர்களிடம்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணான பதில்களை சம்பந்தப்பட்ட மூன்று இளைஞர்களும் அளித்துள்ளனர். 
 

Crime: 'பிளான் நல்லா தான் இருந்துச்சு'... 'மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டேன்' சிக்கிய திருடர்கள்
 
கைது செய்த காவல்துறையினர்
 
இதனை அடுத்து 3 இளைஞர்கள் தங்கி இருந்த அறையை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், 10 செல்போன்கள் லேப்டாக்கள் மற்றும் டேப்லெட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சார்பட்டா என்கிற சபரி வயது (20), முத்துக்குமார் (18) , விக்கி (21) ஆகிய மூன்று பேர் என தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரையும் கைது செய்த மறைமலைநகர் போலீசார் அவர்களிடம் இருந்து, 10 செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு, குற்றவாளி பிடிக்க உதவிய இளைஞருக்கு காவல்துறையினர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்
 
 

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
திருமணம் மீறிய உறவு ...விடிய விடிய எழாத மனைவி !! போலீசில் திடீர் சரணடைந்த கணவன்
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
தேனியில் தனியாக வசித்த மூதாட்டி கொடூர கொலை: நகை, பணம் மாயம்! பின்னணி என்ன?
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
காரைக்காலில் இருந்து கிளம்பிய கார்... சீர்காழி பாலத்தில் காத்திருந்த ட்விஸ்ட்! எஸ்பி-யின் அதிரடி ஆபரேஷன்!
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
MBBS Apply: டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
டாக்டர் ஆகணுமா? மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு - MBBS/BDS-க்கு விண்ணபிக்க இன்று கூடுதல் அவகாசம்
TN Weather News: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Education Minister: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி படித்தது என்ன? - கல்வித் தகுதி விவரங்கள் - புதிய சவால்கள்
CM Vijay Office: உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
உச்சத்தில் இருக்க உயரமான இடத்தில் அலுவலகமா.? முதல்வர் விஜய்க்கு தயாராகும் அறை இவ்வளவு ஸ்பெஷலா.?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
இளைஞர்கள் வங்கி கணக்கில் ரூ.4000.! ஜாக்பாட் அடிக்குமா.? சிஎம் விஜய் கையில் முக்கிய அறிக்கை
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
Embed widget