மேலும் அறிய

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டத்தில், பந்து வடிவில் கைப்பற்றப்பட்ட பொருள்.

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டதில் பந்து வடிவில் கைப்பற்றப்பட்ட பொருள் நாட்டு வெடிகுண்டா? என தடய வியல் ஆய்வுக்கு போலீசார் அதனை அனுப்பி வைத்தனர்.  

பயங்கர ஓசையுடன் வெடித்த மர்ம பொருள் 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகில் யாரும் வசிக்காத பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் நகரம் முழுவதும் பயங்கர ஓசையுடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து தீப்பிடித்ததில் அந்த பாழடைந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது. மர்ம பொருள் வெடித்த அதிர்வில் அருகில் உள்ள 14 புதிய காவலர் குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி தூள், தூளாக கீழே சிதறி கிடந்ததை காண முடிந்தது.


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

சேதமடைந்த பொருட்கள்

ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இந்நிலையில் மர்ம பொருள் வெடித்த பாழடைந்த கட்டிடத்தில் நேற்று மாமல்லபுரம் மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்த இடத்தில் இருந்து பந்துபோன்ற வடிவிலான ஒரு பொருளை கைப்பற்றினர்.


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

தடய அறிவியல் துறையினர் சோதனை 

மேலும் தடய அறிவியல் துறையினர் எரிந்த காகிதங்கள், கட்டைகள் அகியவற்றையும் சேகரித்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பந்து போன்ற வடிவிலான பொருள் அதிவேக நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். தடவியல் பரிசோதனை முடிவில் அவை நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதாவது ஒரு வெடி பொருளாக என தெரிய வரும் என்று தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்குலம், அங்குலமாக சோதனை

மர்ம பொருள் வெடித்த இடத்தில் வெடிக்காத நிலையில் வேறு ஏதாவது வெடி பொருட்கள் உள்ளதா? என ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் அங்கு யாரையும் அனுமதிக்காமல் அந்த பாழடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர். ஆனால் எந்தவிதமான வெடி பொருட்களும் சிக்கவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள பழைய இரு சக்கர வாகனங்களை போலீசார் அகற்றினர். 


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

அச்சத்தில் இருந்த பொதுமக்கள்

முன்னதாக அந்த பாழடைந்த கட்டிடத்தில் மின் ஊழியர்களை வரவழைத்து மின் இணைப்புகள் போலீசார் துண்டித்தனர். இதற்கிடையில் மர்ம பொருள் வெடித்த கட்டிடத்தின் எதிரில் வசித்து வரும் புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் பெண்கள் ஒருவித நடுக்கம், கலந்த பயத்துடன் காணப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டபோது, ஏற்கனவே ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில், மேலும் தங்கள் வீடுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் அக்காவலர் குடியிருப்பு வாசிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளின் கதவுகளை சாத்தி கொண்டு யாரும் வெளியில் வராமல் உள்ளேயே பாதுகாப்பாக இருந்ததை காண முடிந்தது.


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

காவல்துறை சொல்வது என்ன ?

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இரண்டு அரை கோள வடிவிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களையும் இணைத்து பார்க்கும் போது பந்து வடிவில் வருகின்றது. ஒருவேளை இந்த மர்ம பொருள் வெடித்து சிதறி இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. தடய அறிவியல் துறையினர் சோதனைக்காக மேலும் சில பொருட்களை கொண்டு சென்றுள்ளனர். முழுமையான ஆய்வுக்குப் பிறகு வெடித்தது எந்த பொருள் என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget