மேலும் அறிய

மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டத்தில், பந்து வடிவில் கைப்பற்றப்பட்ட பொருள்.

மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து பழைய காவலர் குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டதில் பந்து வடிவில் கைப்பற்றப்பட்ட பொருள் நாட்டு வெடிகுண்டா? என தடய வியல் ஆய்வுக்கு போலீசார் அதனை அனுப்பி வைத்தனர்.  

பயங்கர ஓசையுடன் வெடித்த மர்ம பொருள் 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகில் யாரும் வசிக்காத பாழடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று முன்தினம் மாமல்லபுரம் நகரம் முழுவதும் பயங்கர ஓசையுடன் மர்ம பொருள் ஒன்று வெடித்து தீப்பிடித்ததில் அந்த பாழடைந்த கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது. மர்ம பொருள் வெடித்த அதிர்வில் அருகில் உள்ள 14 புதிய காவலர் குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கி தூள், தூளாக கீழே சிதறி கிடந்ததை காண முடிந்தது.


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

சேதமடைந்த பொருட்கள்

ஒரு மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. இந்நிலையில் மர்ம பொருள் வெடித்த பாழடைந்த கட்டிடத்தில் நேற்று மாமல்லபுரம் மகளீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடய அறிவியல் துறை அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம பொருள் வெடித்த இடத்தில் இருந்து பந்துபோன்ற வடிவிலான ஒரு பொருளை கைப்பற்றினர்.


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

தடய அறிவியல் துறையினர் சோதனை 

மேலும் தடய அறிவியல் துறையினர் எரிந்த காகிதங்கள், கட்டைகள் அகியவற்றையும் சேகரித்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட பந்து போன்ற வடிவிலான பொருள் அதிவேக நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்றும் சந்தேகப்படுகின்றனர். தடவியல் பரிசோதனை முடிவில் அவை நாட்டு வெடிகுண்டா அல்லது வேறு ஏதாவது ஒரு வெடி பொருளாக என தெரிய வரும் என்று தடயவியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்குலம், அங்குலமாக சோதனை

மர்ம பொருள் வெடித்த இடத்தில் வெடிக்காத நிலையில் வேறு ஏதாவது வெடி பொருட்கள் உள்ளதா? என ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் அங்கு யாரையும் அனுமதிக்காமல் அந்த பாழடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றி போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை போட்டனர். ஆனால் எந்தவிதமான வெடி பொருட்களும் சிக்கவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் உள்ள பழைய இரு சக்கர வாகனங்களை போலீசார் அகற்றினர். 


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

அச்சத்தில் இருந்த பொதுமக்கள்

முன்னதாக அந்த பாழடைந்த கட்டிடத்தில் மின் ஊழியர்களை வரவழைத்து மின் இணைப்புகள் போலீசார் துண்டித்தனர். இதற்கிடையில் மர்ம பொருள் வெடித்த கட்டிடத்தின் எதிரில் வசித்து வரும் புதிய போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் பெண்கள் ஒருவித நடுக்கம், கலந்த பயத்துடன் காணப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை போட்டபோது, ஏற்கனவே ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில், மேலும் தங்கள் வீடுகளுக்கு சேதம் ஏற்படாத வகையில் அக்காவலர் குடியிருப்பு வாசிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளின் கதவுகளை சாத்தி கொண்டு யாரும் வெளியில் வராமல் உள்ளேயே பாதுகாப்பாக இருந்ததை காண முடிந்தது.


மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?

காவல்துறை சொல்வது என்ன ?

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், இரண்டு அரை கோள வடிவிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பொருட்களையும் இணைத்து பார்க்கும் போது பந்து வடிவில் வருகின்றது. ஒருவேளை இந்த மர்ம பொருள் வெடித்து சிதறி இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. தடய அறிவியல் துறையினர் சோதனைக்காக மேலும் சில பொருட்களை கொண்டு சென்றுள்ளனர். முழுமையான ஆய்வுக்குப் பிறகு வெடித்தது எந்த பொருள் என்பது குறித்த தகவல்கள் வெளிவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget