மேலும் அறிய

Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவசங்கர் பாபா நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

தனது பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த சிவசங்கர் பாபா, நெஞ்சுவலி எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக டேராடூன் சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

தப்பியோடிய அவர் வேறு ஆசிரமங்களில் பதுங்கி உள்ளாரா என சிபிசிஐடி தேடுதல் வேட்டை நடத்தி வந்தது. . மேலும், சிவசங்கர் பாபா நேபாளத்துக்கு தப்பிச்செல்லாமல் தடுக்க உத்தரகாண்ட், டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. சிவசங்கர் இல்லாமல், திரும்ப போவதில்லை என்பதில் உறுதியாக இருந்த சிபிசிஐடி போலீசார், டேராடூனில் டேரா போட்டனர். அப்பாடா... போலீஸை ஏமாத்திட்டோம் என டெல்லி காசியாபாத்தில் ஷவர் பாத் எடுத்துக் கொண்டிருந்த சிவசங்கர் பாபா பற்றி, சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

உடனே டில்லி விரைந்த தனிப்படை, அங்குள்ள போலீஸ் உதவியுடன் காசியாபாத்தில் ஈஸியாய் சிவசங்கரை தூக்கினர். போலீசார் தன்னை நெருங்குவார்கள் என சற்றும் நினைக்காத பாபா, பேபே என விழித்தார். புகாரை கூறி, அவரை கைது செய்வதாக போலீசார் கூற, தன் வசம் வேறு பாயிண்ட் எதுவும் இல்லாத நிலையில், விரல் பிடித்து நடக்கும் குழந்தை போல அவர்கள் பின் நடந்தார் சிவசங்கர் பாபா. 

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

இதனைத் தொடர்ந்து, அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தபின்னர், டெல்லி நீதிமன்றத்தில் நேற்று  ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை தமிழ்நாடு அழைத்து செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றிரவு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். 

இந்நிலையில், சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் அவரை இன்று ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் முன் வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் சிவசங்கர் பாபா திணறி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் கேள்வி எழுப்பி வருகின்றனர். தான் எந்த தவறும் செய்ய வில்லை என்கிற பதிலையே சிவசங்கர் கூறி வருவதாக கூறப்படுகிறது. 


Sivashankar Baba: சென்னையில் சிவசங்கர் பாபா; சிபிசிஐடி கேள்விகளுக்கு திணறல்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி சுஷில் ஹரி பள்ளி. இந்த பள்ளியின் நிர்வாகியாக செயல்படுபவர் சிவசங்கர். இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும், வாழும் கடவுள் என்றும் கூறிக்கொண்டு, மக்களுக்கு ஆசி வழங்கி வருவதால் அவரை சிவசங்கர் பாபா என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்மீது அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள், இவர் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து, அந்த மாணவிகளின் புகாரை அடிப்படையாக கொண்டு, அந்த தனியார் பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினர். ஆனால், அப்போது அங்கு சிவசங்கர் பாபா இல்லை என்று பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, கடந்த 11-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிவசங்கர் பாபா, பள்ளியின் தாளாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் சிவசங்கர் பாபா நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் சிவசங்கர் பாபாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், அவர் டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார். இதையடுத்து, ஆஜரான பிற நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த விவசாயிகள்; தடுத்து மிரட்டிய திமுகவினர்!

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

துணைவேந்தர்களை மிரட்டினோமா...ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் காட்டமான பதிலடி
துணைவேந்தர்களை மிரட்டினோமா...ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் காட்டமான பதிலடி
MRK.Panneerselvam : ”அமைச்சருக்கு Go Back சொன்ன தருமபுரி திமுக” 2026-லும் ஜெயிக்க வேண்டாமா..?
”அமைச்சருக்கு Go Back சொன்ன தருமபுரி திமுக” 2026-லும் ஜெயிக்க வேண்டாமா..?
Trump Vs Ukraine Vs Russia: யார் இடத்த யார் எடுத்து யாருக்கு கொடுக்கறது.? ட்ரம்ப்பின் சித்து விளையாட்டு...
யார் இடத்த யார் எடுத்து யாருக்கு கொடுக்கறது.? ட்ரம்ப்பின் சித்து விளையாட்டு...
PTR Abt. Internet: என்னது.. மாசம் இவ்ளோ கம்மி விலைல வீடுகளுக்கு இன்டர்நெட்டா.? அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு...
என்னது.. மாசம் இவ்ளோ கம்மி விலைல வீடுகளுக்கு இன்டர்நெட்டா.? அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணைவேந்தர்களை மிரட்டினோமா...ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் காட்டமான பதிலடி
துணைவேந்தர்களை மிரட்டினோமா...ஆளுநருக்கு அமைச்சர் கோவி செழியன் காட்டமான பதிலடி
MRK.Panneerselvam : ”அமைச்சருக்கு Go Back சொன்ன தருமபுரி திமுக” 2026-லும் ஜெயிக்க வேண்டாமா..?
”அமைச்சருக்கு Go Back சொன்ன தருமபுரி திமுக” 2026-லும் ஜெயிக்க வேண்டாமா..?
Trump Vs Ukraine Vs Russia: யார் இடத்த யார் எடுத்து யாருக்கு கொடுக்கறது.? ட்ரம்ப்பின் சித்து விளையாட்டு...
யார் இடத்த யார் எடுத்து யாருக்கு கொடுக்கறது.? ட்ரம்ப்பின் சித்து விளையாட்டு...
PTR Abt. Internet: என்னது.. மாசம் இவ்ளோ கம்மி விலைல வீடுகளுக்கு இன்டர்நெட்டா.? அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு...
என்னது.. மாசம் இவ்ளோ கம்மி விலைல வீடுகளுக்கு இன்டர்நெட்டா.? அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு...
Chennai Traffic Diversion: சோதனை வெற்றி! இதை தெரிஞ்சிக்கோங்க! சென்னையில் மே 4 வரை நீட்டிக்கப்படும் போக்குவரத்து மாற்றம்!
Chennai Traffic Diversion: சோதனை வெற்றி! இதை தெரிஞ்சிக்கோங்க! சென்னையில் மே 4 வரை நீட்டிக்கப்படும் போக்குவரத்து மாற்றம்!
Apple's Shift: ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
ஆஹா.. இது செம்ம மேட்டரா இருக்கே.. இந்தியாவுக்கு மாறும் ஆப்பிள்.. இத படிங்க முதல்ல...
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
இப்போ இல்ல; 30 வருஷமாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
Embed widget