மேலும் அறிய

மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மணல் கடத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளரின் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாடகச்சேரி கிராமத்தில் செல்லும் நண்டலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவீரன் வன்னியர் சங்கம் தலைவர் வி.ஜி.கே.மணி தலைமையில்  பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களை நோக்கி வருவதை அறிந்து மணல் அல்ல பயன்படுத்திய வாகனங்களை விட்டு விட்டு மணல் அள்ளியவர்கள் தப்பி சென்றுள்ளனர். பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்று மணலை எடுத்து ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு அதனை லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது. 


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

அதனையடுத்து உடனடியாக அங்கு  மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை கிராம மக்கள் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பாழையூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட அந்த வாகனங்கள் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜூக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே மணி கூறுகையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி அரசு ஒப்பந்த வேலைகள் செய்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போது பொதுமக்கள் லாரிகளையும் ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஒப்படைத்தாகவும், இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தொடர்ச்சியாக பத்தாண்டு காலம் ஆளும் கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பவுன்ராஜ் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி 10 ஆண்டுகளாக தனது உறவினர்கள் பெயரில் அரசு ஒப்பந்த கட்டிட பணிகள், சாலைப் பணிகளை டெண்டர் எடுத்து, அப்பணிகளுக்குத் தேவையான மணலுக்காக, பல்வேறு இடங்களில் முறைகேடாக குவாரி அமைத்து அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் கூடுதல் ஆழத்திற்கு மணல் எடுத்து வந்ததாகவும், பத்தாண்டு கால ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலமுறை பொதுமக்கள் கிராம அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் என அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்காத இடம் இல்லை என்றும், ஆனால் அளிக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள்,


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

 

இனி அரசு அதிகாரிகளையும், காவல் துறையும் நம்பி பயனில்லை என்று தாங்களாகவே மணல் திருட்டை தட்டிக்கேட்க இறங்கி தற்போது மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த உள்ளோம். காவல்துறையினர் கண்துடைப்புக்காக வேறு யார் மீதாவது வழக்கை பதிவு செய்து உரிய குற்றவாளிகளை தப்பிக்க விடாமல், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா - போக்சோவில் அதிரடி கைது
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
தற்கொலை செய்த இளம் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசுவுக்கு யார் தந்தை ? DNA சோதனையில் மாட்டிய காதலன்
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget