மேலும் அறிய

மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

மயிலாடுதுறை அருகே ஆற்றில் மணல் கடத்தியதாக அதிமுக மாவட்ட செயலாளரின் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் கிராம மக்களால் சிறை பிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாடகச்சேரி கிராமத்தில் செல்லும் நண்டலாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக பொதுமக்கள் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவீரன் வன்னியர் சங்கம் தலைவர் வி.ஜி.கே.மணி தலைமையில்  பொதுமக்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களை நோக்கி வருவதை அறிந்து மணல் அல்ல பயன்படுத்திய வாகனங்களை விட்டு விட்டு மணல் அள்ளியவர்கள் தப்பி சென்றுள்ளனர். பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்று மணலை எடுத்து ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு அதனை லாரிகள் மூலம் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது. 


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

அதனையடுத்து உடனடியாக அங்கு  மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியை கிராம மக்கள் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து பாழையூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட அந்த வாகனங்கள் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜூக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மாவீரன் வன்னியர் சங்க நிறுவனத் தலைவர் வி.ஜி.கே மணி கூறுகையில், அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தொடர்ந்து லாரியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி அரசு ஒப்பந்த வேலைகள் செய்து வருவதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் தற்போது பொதுமக்கள் லாரிகளையும் ஜேசிபி இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஒப்படைத்தாகவும், இதுகுறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், தொடர்ச்சியாக பத்தாண்டு காலம் ஆளும் கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பவுன்ராஜ் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி 10 ஆண்டுகளாக தனது உறவினர்கள் பெயரில் அரசு ஒப்பந்த கட்டிட பணிகள், சாலைப் பணிகளை டெண்டர் எடுத்து, அப்பணிகளுக்குத் தேவையான மணலுக்காக, பல்வேறு இடங்களில் முறைகேடாக குவாரி அமைத்து அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் கூடுதல் ஆழத்திற்கு மணல் எடுத்து வந்ததாகவும், பத்தாண்டு கால ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பலமுறை பொதுமக்கள் கிராம அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் என அரசு அதிகாரிகளிடம் புகார் அளிக்காத இடம் இல்லை என்றும், ஆனால் அளிக்கப்பட்ட புகார்களுக்கு இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள்,


மணல் கடத்தல்: அதிமுக மாவட்டச் செயலாளர் வாகனங்கள் சிறைபிடிப்பு

 

இனி அரசு அதிகாரிகளையும், காவல் துறையும் நம்பி பயனில்லை என்று தாங்களாகவே மணல் திருட்டை தட்டிக்கேட்க இறங்கி தற்போது மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை சிறைபிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த உள்ளோம். காவல்துறையினர் கண்துடைப்புக்காக வேறு யார் மீதாவது வழக்கை பதிவு செய்து உரிய குற்றவாளிகளை தப்பிக்க விடாமல், மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget