மேலும் அறிய

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் மது போதையில் உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த 2 இளைஞர்கள் கைது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஒரு இயக்கத்தில் மாவட்ட துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிமணி (28) என்ற மனைவியும், ஜீவிதா (5) என்ற மகளும் உள்ளனர். திருநாவுக்கரசு ஆங்கூர்பாளையம் சாலையில் டி.டி.வி. தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை மகளிர் குழு மூலம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வந்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்தநிலையில் நேற்று இரவு கட்டண கழிப்பிடம் அருகே திருநாவுக்கரசு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கழிப்பறைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநாவுக்கரசு உடலை போலீசார் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் உமாதேவி கம்பம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து திருநாவுக்கரசின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த கொலை தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் என்ற 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்ட நபரின் கூடவே பல நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை  செய்த பிரகாஷ் , கார்த்திக் என்ற இரண்டு பேரும் மது போதை ,கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த இரண்டு பேரும் கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு குத்தகைக்கு எடுத்துள்ள கழிப்பிடத்தில் அடிக்கடி மது அருந்தி வந்ததாகவும் கழிப்பிட வளாகத்தில் மது அருந்தக்கூடாது என கூறியபோது மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட பின்புதான் பிரகாஷ் மற்றும் கார்த்தி இருவரும் திருநாவுக்கரசை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவர் கம்பத்தை சேர்ந்தவர் என்றும் , கார்த்தி என்பவர் மதுரை சேர்ந்தவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கம்பம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரும் திருநாவுக்கரசுடன் கூட்டாக இருந்து வந்த நிலையில் போதை பழக்கத்தால் உடனிருந்தவரை கொலை செய்யும் அளவுக்கு போதை பழக்கம் கண்ணை மறைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget