மேலும் அறிய

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம், உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் மது போதையில் உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த 2 இளைஞர்கள் கைது.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சி.எம்.எஸ். நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஒரு இயக்கத்தில் மாவட்ட துணைச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிமணி (28) என்ற மனைவியும், ஜீவிதா (5) என்ற மகளும் உள்ளனர். திருநாவுக்கரசு ஆங்கூர்பாளையம் சாலையில் டி.டி.வி. தினகரன் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிப்பிடத்தை மகளிர் குழு மூலம் குத்தகைக்கு எடுத்து நிர்வகித்து வந்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம்,  உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்தநிலையில் நேற்று இரவு கட்டண கழிப்பிடம் அருகே திருநாவுக்கரசு கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கழிப்பறைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநாவுக்கரசு உடலை போலீசார் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் உமாதேவி கம்பம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து திருநாவுக்கரசின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம்,  உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த கொலை தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்த பிரகாஷ், கார்த்திக் என்ற 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்ட நபரின் கூடவே பல நாட்களாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலை  செய்த பிரகாஷ் , கார்த்திக் என்ற இரண்டு பேரும் மது போதை ,கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் எனவும் கூறப்படுகிறது.

தேனி - கண்ணை மறைத்த போதைப்பழக்கம்,  உடனிருந்தவரையே குத்தி கொலை செய்த கொடூரம்..!

இந்த இரண்டு பேரும் கொலை செய்யப்பட்ட திருநாவுக்கரசு குத்தகைக்கு எடுத்துள்ள கழிப்பிடத்தில் அடிக்கடி மது அருந்தி வந்ததாகவும் கழிப்பிட வளாகத்தில் மது அருந்தக்கூடாது என கூறியபோது மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட பின்புதான் பிரகாஷ் மற்றும் கார்த்தி இருவரும் திருநாவுக்கரசை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.  கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்பவர் கம்பத்தை சேர்ந்தவர் என்றும் , கார்த்தி என்பவர் மதுரை சேர்ந்தவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் கம்பம் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரும் திருநாவுக்கரசுடன் கூட்டாக இருந்து வந்த நிலையில் போதை பழக்கத்தால் உடனிருந்தவரை கொலை செய்யும் அளவுக்கு போதை பழக்கம் கண்ணை மறைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth Speech | ‘’GST ஏன் கொண்டு வந்தீங்க?கோவை நிலைமையே மாறிடுச்சு’’ஆவேசமான பிரேமலதாDuraimurugan on Hindi | இந்தி, இங்கிலீஷ் தெரிஞ்சாதா எம்.பி. ஆகணுமா? துரைமுருகன் சர்ச்சை பேச்சு!Duraimurugan on Tamilisai | தமிழச்சி Vs தமிழிசை துரைமுருகன் THUGLIFE மேடையில் ஆரவாரம்Dayanidhi Maran | ”இரும்மா... இரும்மா...உனக்காக தான பேசுறேன்” டென்ஷனான தயாநிதிமாறன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
IPL 2024 RCB vs KKR LIVE: பேட்டிங் செய்ய களமிறங்கும் பெங்களூரு; டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Embed widget