அரியலூர் : பைக்கில் போகும்போக்கில் பெண்ணிடம் தகராறு... தட்டிக்கேட்ட கணவன் மீது தாக்குதல்.. ஒருவர் கைது..
அரியலூர் மாவட்டத்தில் சாலையில் சென்ற பெண்ணிடம் கிண்டல் செய்த நபர் மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
அரியலூர்மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் நகரை சேர்ந்தவர் செந்தில் இவரது மனைவி வசந்தி 39. அதே பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் அருண்குமார் வயது 26. அதே பகுதியில்தான் அருண்குமாரின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.இவர் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகவே பைக்கில் வேகமாகவும், தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
இந்தநிலையில் அருண்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் வசந்தியின் உறவினர் என்பதால் இது தொடர்பாக வசந்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அந்த தெருவில் வசந்தி நின்று கொண்டு இருந்தபோது தனது மோட்டார் பைக்கில் அடிக்கடி வேகமாகவும் தாறுமாறாக வட்டம் அடித்து வசந்தியிடம் வம்பிழுத்ததாகவும் தெரிகிறது.
Also Read | Rasi Palan Today, Feb 17: மேஷத்துக்கு எச்சரிக்கை.. மீனத்துக்கு அமைதி.. இன்றைய உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..
இதுகுறித்து வசந்தி தனது கணவரிடம் கூறியுள்ளார் இதனைதொடர்ந்து அருண்குமாரை வசந்தியின் கணவர் தட்டி கேட்டுள்ளார். அப்போது இருவரையும் அருண்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கணவன் மனைவி இருவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் செந்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை கைது செய்துள்ளனர்.
மேலும், அருண்குமாரை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அருண்குமார் பெண் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets