மேலும் அறிய

போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி வாகனம் மோதி பலி

தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

திண்டுக்கலில் போலீஸ் வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற நபர் விருதலைபட்டி என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இருவரும் அங்குள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இதனிடையே தேனி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வேடசந்தூர் பகுதி நூற்பாலைகளில் பணி செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டும் பொன்னுச்சாமி  விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணி செய்து வந்த தனிப்பிரிவு காவலர்  குமாரசாமி மற்றும் காவல்நிலைய எழுத்தாளர் முத்துக்குமார் ஆகிய இருவரும் பொன்னுசாமியை கையும், களவுமாக பிடித்துள்ளனர்.

அவரிடம் சோதனை செய்ததில் 15க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பொன்னுசாமியை விசாரணைக்காக இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அரவக்குறிச்சி தாலுகா மஞ்சுவெளி ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்குறிச்சி மற்றும் எல்லப்பட்டி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது பொன்னுச்சாமி இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த தனியார் நூல் தொழிற்சாலை தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த இடம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மையப்பகுதியில் உள்ளதால் போலீசாருக்கு விசாரணை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. பின் சம்பவ இடம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்டது என தெரிய வந்ததால் பொன்னுசாமி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தனது கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி கலையரசி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் பொன்னுசாமிக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை எனவும், அவர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கலையரசி கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த நபர் ஆர்.கோம்பையைச் சேர்ந்த விஜயகுமாரை போலீசார் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget