மேலும் அறிய
Advertisement
கள்ளக் காதலியை இரும்புராடால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன் - அரூர் அருகே பயங்கரம்
அரூர் அருகே காப்புகாட்டில் கள்ளக் காதலியை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலன்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீழானூர் காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்தது. இதனை குகால்நடைகள் மேய்ப்பவர்கள் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் சித்தேரி அருகே வெள்ளாம்பள்ளியை சேர்ந்த பார்வதி, (32) என்பது தெரியவந்தது. பார்வதிக்கு ஆண்டியப்பனுடன் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் உள்ள நிலையில் கடந்த 9 வருடங்களுக்கு முன் கணவர் இறந்து விட்டதால் குழந்தைகளோடு தனியாக கீரப்பட்டியில் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இரண்டு திருமணம் ஆன வாழத்தோட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், (42) என்பருடன் கடந்த ஒரு வருடமாக தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
உண்ணாமலை என்ற பெண்ணுடன் சக்திவேலுக்கு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு முதல் மனைவி உண்ணாமலை இறந்துவிட்டதால், இரண்டாவது முறையாக ஏழு வருடத்திற்கு முன்பு இந்துமதி, என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இரண்டாவது மனைவி இந்துமதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போன பார்வதிக்கும் இவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பார்வதிக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் சம்பவத்தன்று பார்வதியை அரூருக்கு வரவழைத்து, அரூரில் இருந்து இருசக்கர வாகனத்தின் மூலம் இருவரும் கீழானூர் காப்பு காட்டுக்குள் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். பின்பு மீண்டும் ஒருமுறை தனிமையில் அழைத்ததற்கு பார்வதி சம்மதிக்காத காரணத்தால் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் அடித்து முகத்தை சிதைத்து உள்ளார். அதே இடத்தில் பார்வதி இறந்து விட்டதால், அவர் கழுத்தில் அணிந்திருந்த தோடு, வெள்ளி கொலுசு அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து இரண்டாவது மனைவி இந்துமதி கோட்டப்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டில் இருந்ததால் சக்திவேல் அங்கு சென்றுள்ளார். இந்த தகவலை தெரிந்து கொண்ட காவல் துறையினர் கோட்டைப்பட்டிக்கு சென்று சக்திவேலை கையும் கழுவுமாக பிடித்துக் கொண்டு அரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion