மேலும் அறிய

நிதி மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் - 2 காவலர், கல்வித்துறை அலுவலர் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரத்தில் அதிக லாபம் அளிப்பதாக கூறி நிதி திரட்டி மோசடியில் ஈடுபட்ட இரு போலீஸார் உள்பட அவரது குடும்பத்தினர் 8 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி
 
காஞ்சிபுரம், ஏனாத்தூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயபாரத். இவர் மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி சௌமியா, இவரது தம்பி ஆரோக்கிய அருண் போக்குவரத்து காவலராக காஞ்சிபுரத்தில் பணி புரிகிறார். மற்றொரு தம்பி இருதயராஜ் காவல் பணியில் இருந்தவர். அவர் அந்தப் பணியை விட்டுவிட்டு பள்ளிக் கல்வித்துறையில் பணி செய்கிறார். இவர்களது தந்தை ஜோசப், தாயார் மரியச்செல்வி
 
40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி
 
இவர்கள் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வது, பெரு நிறுவனங்களின் விற்பனை உரிமை எடுப்பது, பல்வேறு தொழில்களில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறியுள்ளனர். இதுபோல் போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் கூறி அவர்களிடம் இருந்து ரூ.40 கோடி அளவுக்கு முதலீடு திரட்டி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சகாயபாரத், அவரது மனைவி சௌமியா, இருதயராஜ் அவரது மனைவி ஜெயஸ்ரீ, இவர்களின் தாயார் மரியச்செல்வி ஆகிய 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர். 
 
district crime branch police arrested 8 members of his family, including two policemen who were involved in fraud by collecting funds claiming to give high profits in Kanchipuram Crime : போலீஸ்காரங்க கூட இப்படி பண்ணா என்ன அர்த்தம்...! அட போங்கப்பா, அதிரடி காட்டிய எஸ்.பி..!
 
8 பேர் கைது
 
போக்குவரத்து காவலர் அருண், அவரது மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடி வந்த நிலையில் அவர்கள் மூவரையும் இன்று  கைது செய்தனர். நிதி மோசடி வழக்கில் போலீஸார் குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்ட சமம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது முதல் கட்ட விசாரணையை நாங்கள் செய்து வருகிறோம். இதன் பின்னர் இது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸருக்கு மாற்றப்படும் என்றார்.
 
கைதான இரு காவலர்கள் பணியிடை நீக்கம்
 
காஞ்சிபுரத்தில் பல்வேறு நபர்களிடம் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்வதாக கூறி 40 கோடி வரை பணம் பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த மாமல்லபுரம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலராக பணி புரிந்து வந்த  சகாயபாரத், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்த ஆரோக்கிய அருண் ஆகியோர் பணியிடை நீக்கப்பட்டதாகவும், பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றி வரும் குற்றவாளி இருதயராஜ் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே ஐ.பி.எஸ். ஆருத்ரா கோல்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து பலர் தங்கள் பணத்தை இழந்துள்ள நிலையில் தற்போது இவர்களிடமும் பலர் பணத்தை இழந்துள்ளனர். இவர்கள் போலீஸாராக இருப்பதால் காவல்துறையில் பணி செய்யும் பலர் இவர்களிடம் பணத்தை முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget