மேலும் அறிய

Crime : 20 ஆண்டுகளாக துபாயில் தலைமறைவு..! தமிழ்நாடு திரும்பிய குற்றவாளி விமான நிலையத்திலேயே கைது..!

20 ஆண்டுகளாக துபாயில் தலைமறைவாக இருந்த பின்னர் தமிழ்நாடு திரும்பிய தேடப்பட்ட குற்றவாளியை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு வயது 43. இவர் துபாய் நாட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். தன்னுடைய 23 வயதில் துபாய் சென்ற அவர் கடந்த 20 ஆண்டுகளாக துபாயிலே ஓட்டுனராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்ப ரவிக்குமார் முடிவு செய்துள்ளார். இதையடுத்து, துபாயில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஆவணங்கள் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல, 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு திரும்பிய ரவிக்குமாரை ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவரது ஆவணங்களை சோதனை செய்த அதிகரிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ரவிக்குமார் மீது தேடப்படும் குற்றவாளி என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்ட காவல்துறையால் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.


Crime : 20 ஆண்டுகளாக துபாயில் தலைமறைவு..! தமிழ்நாடு திரும்பிய குற்றவாளி விமான நிலையத்திலேயே கைது..!

இதையடுத்து, அவரைச் சுற்றிவளைத்து அதிகாரிகள் அவரை பிடித்தனர். ரவிக்குமார் தன்னுடைய இளமைப் பருவத்தில் தஞ்சை பகுதியில் சிறு சிறு திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ரவிக்குமார் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரவிக்குமார் பிடிபட்ட தகவலை விமான நிலைய அதிகாரிகள் தஞ்சை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு நேரில் வந்து ரவிக்குமாரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி துபாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, கடந்த 2020ம் ஆண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அரியலூரைச் சேர்ந்த புலித்தேவன் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். ஜாமீனில் வெளிவந்த அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்து வந்தார்.


Crime : 20 ஆண்டுகளாக துபாயில் தலைமறைவு..! தமிழ்நாடு திரும்பிய குற்றவாளி விமான நிலையத்திலேயே கைது..!

சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் புலித்தேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டதையடுத்து, தலைமறைவாக இருந்த புலித்தேவன் அரியலூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து, புலித்தேவனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  

மேலும் படிக்க : பாலியல் வன்கொடுமையா? சோனாலி போகாட் மரணத்தில் திடீர் திருப்பம் : உறவினர்கள் போலீஸில் புகார்!

மேலும் படிக்க : Driving License : இனிமே லைசென்ஸ் இல்லன்னா, இதெல்லாம் உங்களுக்குக் கிடையாது.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget