மேலும் அறிய

Crime: "காதலன் உனக்குத்தான்" 40 சவரன் மோசடி..! அட இப்படி கூடவா ஏமாறுவாங்க..! பெண்களே உஷார்..

உன்னை உனது காதலனிடம் சேர்த்து வைக்கிறோம் என்று கூறி, 40 சவரன் தங்க நகைகளை இணையதளம் மூலம் ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

" ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ் "
 
சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்காக, பல்வேறு இணையதளங்களை ஆய்வு வந்துள்ளார். இப்போது 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' என்ற செயலி, காதலில் தோல்வி அடைந்த அல்லது காதல் நிறைவேறாத இளைஞர்களுக்கு உதவி செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து சென்னை இளம் பெண், அந்த இணையதள செயலியில் தனது பெயரை பதிவு செய்து, தனது காதலன் பற்றியே விவரங்களையும் தெரிவித்தார்
 
40  சவரன் நகை
 
இதையடுத்து அந்த இளம் பெண்ணை இணையதளம் மூலமாக தொடர்பு கொண்ட, இரண்டு பேர் சென்னை விமான நிலையம் வரும்படி கூறினர். இந்த இளம் பெண்ணும் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த இரு இளைஞர்கள், நாங்கள் உங்கள் காதலரோடு உங்களை சேர்த்து வைத்து விடுகிறோம். ஆனால் கொஞ்சம் செலவு அதிகமாகும் என்று பணம் அல்லது தங்கநகை கேட்டுள்ளனர். இந்த இளம் பெண் 40 சவரன் தங்க நகைகளை, சென்னை விமான நிலையத்தில் வைத்து, அவர்களிடம் கொடுத்தார்.
 

Crime:
"தவறாக இணையதளத்தில் சித்தரித்து விடுவோம்" 
 
தங்க நகைகளை வாங்கிச் சென்ற அந்த இரு இளைஞர்கள், அவர்கள் கூறிய நாட்களுக்குள் இளம் பெண்ணை, காதலனோடு இவரை சேர்த்து வைக்கவில்லை. இதற்கு மாறாக அந்த இளைஞர்கள் இந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, நீ கொடுத்த நகைகள் போதுமானது அல்ல. மேலும் ரூபாய் ஐந்து லட்சம் பணம் வேண்டும். இல்லையென்றால் உன்னை பற்றி அவதூறாக இணையதளங்களில் செய்திகளை பரப்பி விடுவோம், என்று மிரட்டினர். இதனால் பதறிப் போன இளம் பெண், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 
 
" கண்ணீரோடு புகார் அளித்த பெண்" 
 
அதன்பின்பு சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் வந்து தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீரோடு புகார் எழுதிக் கொடுத்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இணையதள முகவரியை ஆய்வு செய்த போது, அது பஞ்சாப் மாநிலத்தின் இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் அந்த இளம் பெண்ணை வைத்து அந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள செய்தனர். அந்த இளம் பெண் அந்த இளைஞர்களிடம்,  ஏற்கனவே நான் நகைகளை கொடுத்த, அதே சென்னை விமான நிலையத்திற்கு வந்தால், நீங்கள் கேட்ட பணத்தை  கொடுக்கிறேன் என்று பேசச் செய்தனர். அந்த இளைஞர்களும் அதற்கு சென்னை வருவதாக கூறினார்.
 
"திட்டத்தில் சிக்கிய இருவர்"
 
 
அந்த இளைஞர்கள் இருவரும்  விமானம் மூலம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையம் வந்தனர். போலீசார் சென்னை விமான நிலையத்தில், இளம் பெண்ணை தனியே நிறுத்தி, அந்த இளைஞர்களிடம் பேசச் செய்தனர். அதோடு சாதாரண உடை அணிந்த போலீசார், பயணிகள் போல் நடித்து கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இளம் பெண் பணம் தரப் போகிறார் என்ற சந்தோசத்தில் பஞ்சாபில் இருந்து விமானத்தில் வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அனில் குமார் (27), ககன்தீப் பார்கவ் (33) ஆகிய இரு இளைஞர்கள் வந்து, இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, சாதாரண உடை அணிந்த போலீசார் சுற்றி  வளைத்து பிடித்து கைது செய்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். 

Crime:
 
இதேபோன்று பல மோசடிகள்....
 
அங்கு வைத்து தீவிர விசாரணை நடத்திய போது, இவர்கள் இதைப்போல் இந்த போலியான இணையதளத்தை தொடங்கி பல இளம் பெண்களையும் இளைஞர்களையும் ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து இரண்டு பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களிடமிருந்து பணம், ரூபாய் 8.5 லட்சம், 54 கிராம் தங்க செயின்கள் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு இரண்டு பேர் மீதும் சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.இவர்கள் இருவரையும் விரைவில் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!
Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
Embed widget