மேலும் அறிய

Crime: 12-ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பூதப்பாண்டி அருகேயுள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கன்னியாகுமரில் 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பூதப்பாண்டி அருகேயுள்ள ஒரு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதற்காக அவர் குடும்பம் பூதப்பாண்டி பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளது. அந்த மாணவி கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இதனால் பூதப்பாண்டி போலீசில் மாணவி காணாமல் போனது பற்றி புகாரளிக்கப்பட்டது. 

அதன்பேரில் மாணவியை போலீசார் வழக்குப்பதிவு செய்து பல இடங்களிலும் தேடினர். மேலும் இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில் மாணவிக்கும், ஆரல்வாய்மொழியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்த இளைஞரான பிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்தான் அப்பெண்ணை கடத்தி சென்றதும் தெரிய வந்ததால் பிரகாஷை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். 

பிரகாஷின் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அது திருப்பூரில் இருப்பதாக காட்டியது. உடனடியாக திருப்பூர் செல்ல  போலீசார் நினைத்தார். ஆனால் பிரகாஷ்  மாணவியை குமரியில் உள்ள அவரது வீட்டு முன் விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார். முன்னதாக மாணவியுடன் பிரகாஷ் இருப்பதை போலீசார் கண்டுபிடித்ததும், பிடிக்க வரும் தகவலை பிரகாஷூக்கு அவரது பெற்றோர் தெரிவித்துள்ளதால் பிரகாஷ் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இந்நிலையில் மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியானது. அதாவது, ‘அந்த மாணவி கீரிப்பாறையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்ற போது, அங்கு வேலை விஷயமாக பிரகாஷ் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் செல்போன் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக இருவரும் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். 
 
முதலில் நட்பாக பேசிய பிரகாஷ் பின்னர் காதலிப்பதாக கூறி பல்வேறு இடங்களுக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பிப்ரவரி 19 ஆம் தேதி திருப்பூருக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் போலீசார் தேடுவதை அறிந்ததும் மாணவியை விட்டுவிட்டு பிரகாஷ் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். 

இந்த வழக்கில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதால் வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் போக்சோ வழக்கில் பிரகாஷை போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget